சென்னை,பிப்.24- புத்தாண்டு தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது. அமெரிக்கா-ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக ஜனவரி மாதம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்தது. சென்னையில் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் ஜனவரி 8 ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.31 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை எட்டியது. போர் பதற்றம் தணிந்த பிறகு விலை சற்று குறைந்தது. அதன்பிறகு தங்கம் விலை ஏறுவதும், இறங்குவதுமாக நிலை இல்லாமல் காணப்பட்டது. சென்னையில் கடந்த 20 ஆம் தேதி ஒரு கிராம் ரூ.3,978-க்கும், ஒரு பவுன் ரூ.31,824-க்கும் விற்பனை யானது. மறுநாள் (21 ஆம் தேதி) தங்கம் விலை வர லாறு காணாத வகையில் பவுன் ரூ.32 ஆயிரத்தை தாண்டியது. அன்று ஒரு கிராம் ரூ.4,051-க்கும், ஒரு பவுன் ரூ.32,408-க்கும் விற்பனையானது.
இதனைத் தொடர்ந்து 22 ஆம் தேதியும் தங்கம் விலை மேலும் உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.4,072 ஆக வும், ஒரு பவுன் ரூ.32,576 ஆகவும் உயர்ந்தது. இந்நிலையில் சென்னையில் ஒரே நாளில் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் மொத்தமாக 752 ரூபாய் உயர்ந்து வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டி யது. அதாவது 33 ஆயிரத்து 328 ரூபாய்க்கு விற்ப னையாகி வருகிறது. ஒரு கிராம் காலையில் 28 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில், பிற்பகலில் மேலும் 66 ரூபாய் அதிகரித்தது. மொத்தமாக ஒரே நாளில் ஒரு கிராம் ஆபரணத்தங்கம் 94 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 166 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 40 காசுகளுக்கும், பார் வெள்ளி ஒரு கிலோ 52 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை 33 ஆயிரம் ரூபாயை கடந்து இமாலய உச்சத்தை தொட்டுள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கலக்கமடைந்துள்ளனர்.