tamilnadu

img

ஆந்திராவில் 27 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா தொற்று - 4 பள்ளிகள் மூடப்பட்டது 

ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள நான்கு தனியார் பள்ளிகளில் 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த நான்கு பள்ளிகளும் மூடப்பட்டுள்ளது. அந்த மாணவர்கள் 9 முதல் 10 ஆம் வகுப்புகளில் படித்த மாணவர்களாகும்.

கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகளின் படி 27 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நான்கு பள்ளிகளுக்கும் 10 நாட்கள் மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளிகளில் தொற்று ஏற்பட்டுள்ள காரணத்தால், மாவட்ட கல்வி அதிகாரி அனைத்து பள்ளிகளுக்கும் கொரோனா கட்டுப்பாடுகளை முறையாக கட்டாயம் பின்பற்ற வேண்டும் என எச்சரித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட 27 மாணவர்களும் தனிமைப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 ஆவது ஊரடங்கு தளர்வுகளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை மீண்டும் திறப்பது குறித்து முடிவு செய்யுமாறு மாநில அரசுகளை மையம் கேட்ட பின்னர், பல மாநிலங்கள் உயர்நிலை பிரிவுகளுக்கான வகுப்புகளை மீண்டும் தொடங்கியுள்ளன. ஆந்திராவில், ஜூனியர் வகுப்புகள் இன்னும் தொடங்கப்படவில்லை. ஆனால் நாடு முழுவதும் ஊரடங்கின் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு உயர்நிலை  வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும், சமீபத்திய அறிவிப்பில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நவம்பர் 2 முதல் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று கூறியுள்ளார்.