tamilnadu

img

பேரூராட்சிகளிலும் நூறு நாள் வேலை கேட்டு மனு...

அருமனை;
பேரூராட்சிகளிலும் 100 நாள்வேலை கேட்டு அருமனை அருகேஇடைக்கோடு பேரூராட்சியில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் ராஜு தலைமை தாங்கினார். மேல்புறம் வட்டார கட்சி வட்டார செயலாளர் ஜெயராஜ், மூத்த தோழர்தங்கப்பன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.லீமாறோஸ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மலை விளை பாஸி உரையாற்றினர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மனு கொடுத்தனர்.