tamilnadu

img

மத்திய அரசுக்கு எதிராக தீர்மானமா? அமைச்சர் ஆவேசம்!

சென்னை,ஜூலை 15- தமிழக சட்டப்பேரவையில் திங்க ளன்று(ஜூலை 15) கேள்வி நேரத்திற்கு பிறகு நேரமில்லா நேரத்தில் திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சிறப்பு கவன  ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். தபால்  துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணித் தது குறித்து அவர் பேசி முடித்ததும் அமைச்சர் ஜெயகுமார் பதில் அளித்தார். அதனைத் தொடர்ந்து காரசாரமாக விவாதம் நடந்தது. முதலமைச்சர், துணை முதலமைச்சரும் குறுக்கிட்டு சில  விளக்கம் கொடுத்தனர். இது தங்களை கொச்சைப்படுத்துவதாக உள்ளதாக கூறி  திமுக உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்த ததைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்,“ இரு மொழி கொள்கையில் அரசு உறுதியாக உள்ளது. தீர்மானம் கொண்டு வரமாட்டோம் என்று நாங்கள் சொல்லவில்லை. இப்போது அவசரம் இல்லை. காரணம், தமிழகத்தில் நடந்த தபால் துறை தேர்வு முடிவுகளை வெளியிட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது” என்றார். ஹைட்ரோ கார்பன், நீட், தபால்துறை என எதற்கு எடுத்தாலும் மத்திய அரசை  கண்டித்து தீர்மானம், கண்டன தீர்மானம்  கொண்டு வரவேண்டும் என்று திமுகவி னர் வற்புறுத்துகிறார்கள். கண்டன தீர்மா னம் கொண்டு வந்து மத்திய அரசோடு மாநில அரசுக்கு சிக்கலை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் . அது ஒருபோதும் முடி யாது என ஆவேசமாக கூறினார்.