சென்னை,டிச.20- பிடதி ஆசிரமத்தில் பல் மருத்துவர் சிறைவைக்கப்பட்டி ருப்பதாகக் கூறி தொடரப்பட்டுள்ள ஆட்கொணர்வு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சாமியார் நித்யானந்தா வுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சாமியார் நித்யானந்தா மீது பல்வேறு வழக்குகள் தொட ரப்பட்டுள்ளன. கடத்தல், பாலியல் வழக்குகளை தொடர்ந்து அவ ரது ஆசிரமத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களது குழந்தை களை மீட்டுத்தரக் கோரி பெற்றோர் தரப்பில் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் ஈரோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ஒரு வர், நித்யானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக சிறை வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. ஈரோட்டைச் சேர்ந்த அங்கம்மாள் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். அதில், நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சிறை வைக்கப் பட்டுள்ள தன் மகன் பிராணாசாமியை மீட்டு தன்னிடம் ஒப்ப டைக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு வெள்ளியன்று(டிச.20) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நித்யானந்தா மற்றும் ஈரோடு காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், 4 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.