tamilnadu

img

கோவிட் 19: 60 மில்லியன் மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவார்கள்- உலக வங்கி

கோவிட் 19 பெரும் தொற்று காரணமாக 60 மில்லியன் மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தலைவர் டேவிட் மால்பாஸ் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கோவிட்-19 தொற்று அதிகமாகி வருகிறது. இந்த சூழலில் பல நாடுகளின் லாக்டவுன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனால் உலக நாடுகள் கடும் பொருளாதார சரிவை எதிர்கொள்கின்றன. இந்த நிலையில், கோவிட் 19 பெரும் தொற்று காரணமாக 60 மில்லியன் மக்கள் கடும் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டேவிட் மால்பாஸ் கூறுகையில், ”நடப்பு ஆண்டில், உலகப் பொருளாதாரத்தில் ஐந்து சதவீத சரிவு ஏற்படும் என்று உலக வங்கி எதிர்பார்க்கிறது. இது ஏழை நாடுகளில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும், 60 மில்லியன் மக்கள்  வறுமையில் தள்ளப்படுவார்கள், வறுமை ஒழிப்பில் ஏற்பட்ட அனைத்து முன்னேற்றங்களையும் அழிக்கப்பட்டு உள்ளது. எங்கள் கணிப்புகள் ஆழ்ந்த மந்தநிலையைக் குறிக்கின்றன. இதுவரை, உலக வங்கி 5.5 பில்லியன் டாலர்களை ஏழை நாடுகளில் உள்ள சிக்கலான சுகாதார அமைப்புகள், பொருளாதாரங்கள் மற்றும் சமூக சேவைகளை உயர்த்த செலவிட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.