ஹரியானா மாநிலம் ஹிசாரில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற கிசான் - மஸ்தூர் மகா பஞ்சாயத்து பொதுக்கூட்டத்தில் பல்வேறு விவசாய அமைப்புகள் பங்கேற்றன. இந்த கூட்டு மேடையில் அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர்கள் இந்தர்ஜித் சிங், பி.கிருஷ்ண பிரசாத் மற்றும் சிஐடியு மூத்த தலைவர் ஏ.ஆர். சிந்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஒன்றிய மற்றும் மாநில பாஜக அரசாங்கத்தின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை தோற்கடிக்க மகா பஞ்சாயத்து அழைப்பு விடுத்துள்ளது. மேலும் பாஜகவின் மக்கள் விரோத கொள்கைகளை அம்பலப்படுத்தவும், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை முன்வைத்து பிரச்சாரம் செய்யவும் மாநிலம் முழுவதும் கிராம அளவில் தொடர் நிகழ்ச்சிகளை நடத்த விவசாயிகள் மகா பஞ்சாயத்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.