ஹரியானா மாநிலத்தில் சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) வியாழனன்று மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த போராட்டத்தில் அகில இந்திய விவசாய சங்க (ஏஐகேஎஸ்) தலைவர்கள், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் பாஜக அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் பொழுது கொடூரமான அடக்குமுறை கொண்ட பாஜக அரசாங்கத்தின் மற்றும் இரட்டை இயந்திர அரசாங்கங்களின் உருவ பொம்மைகளை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.