தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்றத் தலைவராக உமர் அப்துல்லா தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளார். இதன்மூலம் அவர் ஜம்மு - காஷ்மீரின் அடுத்த முதல்வராக பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் சட்டமன்றத்தில் ஆட்சி யமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில், நடைபெற்று முடிந்த தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி 42, காங்கிரஸ் 6, சிபிஎம் 1, தேசிய சிறுத்தைகள் கட்சி 1 என ‘இந்தியா’ கூட்டணி 50 இடங்களை வென்றது.
பாஜக 29 தொகுதிகளிலும், மக்கள் ஜனநாயகக் கட்சி 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஏனைய இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
இதன் பின்னணியில், ஸ்ரீநகரில் உள்ள நவா-இ-சுபா வளாகத்தில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சி யின் தலைமையகத்தில் அக்கட்சி எம்எல்ஏ-க்களின் கூட்டம், உமர் அப்துல்லாவின் தந்தை பரூக் அப் துல்லா தலைமையில் நடைபெற்றது. இதில், தேசிய மாநாட்டுக் கட்சி எம்எல்ஏ-க்கள் உமர் அப்துல்லாவை அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
இதேபோல காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்திலும் உமர் அப்துல்லாவுக்கு ஆதரவளிக்கும் முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான கடிதம் துணைநிலை ஆளுநரிடம் வழங்கப் படும் என்றும், அதைத் தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் பதவியேற்க வருமாறு துணைநிலை ஆளுநர் அழைப்பு விடுத்த பிறகு; அநேகமாக திங்கட்கிழமையன்று (அக்.14) ‘இந்தியா’ கூட்டணி சார்பில் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உமர் அப்துல்லா, ஏற்கெனவே, 2009-ம் ஆண்டு தன்னுடைய 28 வயதில் ஜம்மு - காஷ்மீரின் முதலமைச்சராக பதவியேற்று பணி யாற்றியுள்ளார்.