லக்னோ, ஜூலை 5- தன்பாலின உறவாளர் சமூ கத்தைக் குறிக்கும் ‘வானவில்’ கொடியுடன் காளி வேடமணிந்த பெண் ஒருவர் சிகரெட் புகைக் கும் போஸ்டரை வெளியிட்ட ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை மீது உ.பி. போலீ சார் 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதேபோல் தில்லி போலீ சாரும் லீனா மணிமேகலை மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இயக்குநர் லீனா மணிமேகலை. கவிஞர், ஆவணப்பட இயக்குநர், இண்டிபெண்டெண்ட் திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை தற்போது கனடாவின் டொரண்டோ பகுதி யில் வசித்து வருகிறார். இவர் அண்மையில் தனது இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காளி’ என்ற திரைப்படத்தின் போஸ்டரை அவர் பகிர்ந்திருந் தார். கனடா நாட்டின் டொரண் டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்தத் திரைப்படம் திரையிடப்பட்ட தாகவும் லீனா மணிமேகலை குறிப்பிட்டிருந்தார்.
இந்த படத்தின் போஸ்டர், பெண் தெய்வமான காளியின் வேடத்தில் ஒரு பெண் புகைப் பிடி்க்கும் விதமாக காட்சிப்படுத் தப்பட்டு இருந்தது. அதன் பின்ன ணியின் தன்பால் உறவாளர் களின் அடையாளமான வான வில் கொடியும் இடம்பெற்றிருந் தது. இது சர்ச்சையை ஏற்படுத்தி யது. புகார்களும் எழுந்தன. இயக்குநர் லீனா மணி மேகலை மீது வழக்குப் பதிய வும், படத்திற்குத் தடை விதிக்க வும், பசுப் பாதுகாப்பு இயக்கம் நடத்தி வரும், தில்லியைச் சேர்ந்த அஜய் கவுதம் என்பவர் தில்லி காவல்துறையினரிடமும், ஒன் றிய உள்துறை அமைச்சகத்திட மும் புகார் அளித்தார். மேலும் பல வலதுசாரி அமைப்பினர் பல ரும் இயக்குநர் லீனா மணி மேகலைமீது புகார் கொடுத்த னர். இதையடுத்து, லீனா மணி மேகலை போஸ்டரைத் திரும்பப் பெறுமாறு, கனடாவில் உள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டது. “டோரோண்டோவில் உள்ள அகா கான் அருங்காட்சியகத்தில் ‘Under the tent’ திட்டத்தின் அங்கமாக வெளியிடப்பட்ட திரைப்படத்தின் போஸ்டரில் இந்து கடவுள் அவமதிக்கப்பட் டுள்ளதாக கனடா வாழ் இந்து சமூக மக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன.
டோரோண்டோவில் உள்ள தூதரகம் நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்களிடம் கவலையை தெரிவித் துள்ளது. இதற்கு எதிராக நட வடிக்கை எடுக்கக் கோரி பல் வேறு இந்து அமைப்புகள் சம் பந்தப்பட்ட அமைப்பை அணுகி யுள்ளது. உணர்வுகளை தூண்டி விடும் விதமாக வெளியிடப்பட் டுள்ள போஸ்டரை திரும்ப பெற வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டா ளர்களிடமும் கனடா அரசிடமும் கேட்டுக் கொண்டுள்ளோம்” என்று இந்திய தூதரகம் கூறி யிருந்தது. இந்நிலையில்தான், உ.பி. பாஜக அரசின் காவல்துறை லீனா மணிமேகலை மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ள னர். இதேபோல் தில்லி போலீசா ரும் ஐபிசி 153A, 295A ஆகிய பிரிவுகளில் லீனா மணிமேகலை மீது வழக்கு பதிவு செய்துள்ள னர். தன்மீதான விமர்சனங்க ளுக்கு பதிலளித்துள்ள இயக்கு நர் லீனா மணிமேகலை, “எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சா மல் நம்புவதைப் பேசும் குர லோடு இருந்துவிட விரும்புகி றேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதி விட்டுள்ளார்.