states

லக்கிம்பூர் கொலை வழக்கு ஆசிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன்

லக்னோ, பிப். 10 - லக்கிம்பூரில் விவசாயிகள் கொல்லப் பட்டது தொடர்பாக உத்தரப்பிரதேச  கீழமை நீதிமன்றத்தில் 5,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை காவல்துறை தாக்கல் செய்துள்ளது. அதில், விவசாயிகள் மீது காரை  ஏற்றிய சம்பவ இடத்தில் ஆசிஷ் மிஸ்ரா இருந்துள்ளார் என்று கூறி அவரது பெயர் முக்கிய குற்றவாளியாக இடம்பெற்றது. இந்த நிலையில், அஜய் மிஸ்ராவின் மகனான ஆசிஷ் மிஸ்ராவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்ற  லக்னோ கிளை ஜாமீன் வழங்கியுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் தொடங்கிய நிலையில் ஜாமீன் கிடைத்துள்ளது. ஆசிஷ் மிஸ்ரா, ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அஜய் மிஸ்ராவை ஒன்றிய அமைச்சர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.