நாட்டின் முக்கிய தேசியக் கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் கட்சி யின் தலைவராக இருப்பவர் மாயாவதி. இவர் உத்தரப்பிர தேசத்தில் 5 முறை முதல்வராக இருந்த நிலையில், இவரது கட்சி மாநிலத்தில் தலித் ஆதரவு வாக்கு வங்கியைக் கொண்டுள்ளது. மோடிக்கு எதிரானவர் போன்ற பிம்பத்தை மாயாவதி வெளிப் படுத்தினாலும் எதிர்க்கட்சிகளின் “இந்தியா” கூட்டணியில் இணை யாமல் தனித்தே செயல்பட்டு வந் தார். இதனால் பகுஜன் சமாஜ் பாஜ கவின் “பி டீம்” என அழைக்கப் பட்டு வந்த நிலையில், தற்போது முடிந்த மக்களவைத் தேர்தலில் எவருடனும் கூட்டணி இன்றி பகுஜன் சமாஜ் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 79 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது.
இந்நிலையில், ஜூன் 4 அன்று வெளியான மக்களவை தேர்தல் முடிவில் உத்தரப்பிரதேச மாநில மக்களின் அமோக ஆதரவை பெற்ற “இந்தியா” கூட்டணி 44 தொ குதிகளை (சமாஜ்வாதி - 37, காங்கிரஸ் - 6, ஆசாத் சமாஜ் - 1) கைப்பற்றியது. 2014 முதல் அடிக்கத் துவங்கிய மோடி அலை உத்தரப் பிரதேசத்தில் 2024இல் ஓய்ந்துள்ள நிலையில், மாநிலத்தில் வலுவான அடித்தளத்தை கொண்ட பாஜக கூட்டணி வெறும் 36 தொகுதிகளை (பாஜக - 33, ஆர்எல்டி - 2, அப்னா தளம் (எஸ்) - 1) மட்டுமே கைப் பற்றியது. அதே சமயத்தில் மாயா வதியின் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதிகளில் கூட வெல்லாத நிலையில், 9.39% வாக்குகளை பெற்று பாஜகவின் வெற்றிக்கு உத வியுள்ளது. அதாவது உத்தரப் பிரதேசத்தின் 14 தொகுதிகளில் சமாஜ்வாதியை விட அதிக வாக்கு களை பெற்று, குறைந்த வாக்கு வித்தியாசத்தில் பாஜகவின் வெற்றிக்கு உதவியுள்ளார். 14 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் போட்டியிடவில்லை எனில், பாஜக 14 தொகுதிகளில் வெற்றியை இழந்து இன்னும் மோசமான தோல்வியை சந்தித்திருக்கும்.
உதாரணமாக, மீரட் தொகுதி யில் பாஜக வேட்பாளர் அருண் கோவில் வெறும் 10,585 வாக்குக ளில் வெற்றி பெற்றுள்ளார். அருண் கோவில் 5,46,469 வாக்குகள் பெற்ற நிலையில், சமாஜ்வாதியின் சுனிதா வெர்மா 5,35,884 பெற்றார். பகுஜன் சமாஜ் வேட்பாளர் குமார் தியாகி 87,025 வாக்குகள் பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சிக ளின் வாக்குகளை இரண்டாக உடைத்து பாஜகவின் வெற்றிக்கு உதவியுள்ளார். இதே போல அக்பர்பூர், அம்ரோஹா, பரூகாபாத், பூல்பூர், ஷாஜஹான்பூர், உன்னாவ், ஹர்தோய், மிஸ்ரிக், பன்ஸ்கா வ்ன், மிர்சாபூர், பதோஹி மற்றும் பிஜ்னோர் உள்ளிட்ட தொகுதி களிலும் எதிர்க்கட்சிகளின் வாக்கு களை சிதற வைத்து பாஜகவை கரை சேர்த்துள்ளார்.
நாட்டின் நலனை உணர்ந்து மாயாவதி செயல்பட்டு இருந்தி ருந்தால் உத்தரப்பிரதேசத்தில் 70க்கும் மேற்பட்ட தொகுதிகளில் “இந்தியா” கூட்டணி ஆட்சியை கைப்பற்றி இருக்கும். ஆனால் பாஜகவின் மறைமுக தொடர்பால் மக்கள் அதிகம் எதிர்பார்த்த “இந்தியா” கூட்டணியின் ஆட்சிக் கனவை பொய்க்க வைத்துள்ளார்.