states

img

ராஜஸ்தானில் வாள், துப்பாக்கிகளுடன் ஆயுதப் பயிற்சி மேற்கொண்ட பஜ்ரங் தளம்

மவுண்ட் அபு, ஏப். 19- ராஜஸ்தான் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான மவுண்ட் அபுவில் ஏப்ரல் 13,14,15 ஆகிய தேதிக ளில் தீவிர இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தளம் ஏற்பாட்டில் ராஷ்ட்ரிய ஷிக்ஷக் பிரஷிக்ஷன் வர்க் (தேசிய ஆசிரியர் பயிற்சி முகாம்) என்ற பெய ரில் பயிற்சி நடைபெற்றது.  ஆசிரியர் பயிற்சி எனக் கூறிக் கொண்டு விஎச்பி முன்னாள் தலைவ ரும், அந்தராஷ்டிரிய இந்து பரிஷத்தின் தற்போதைய தலைவருமான பிரவீண் தொகாடியா தலைமையில் 3 நாட்க ளும் வாள், கத்தி போன்ற கூரிய ஆயுதங் களுடனும், துப்பாக்கிகளால் சுட்டும் தீவிர ஆயுத பயிற்சி மேற்கொண்டுள்ள னர். பயிற்சிக்கு இடையே முஸ்லீம் மக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதமாக பல்வேறு கருத்துக் கள் கூறப்பட்டுள்ளன. 

கோட்டைவிட்ட ராஜஸ்தான் காவல்துறை

மவுண்ட் அபுவில் 3 நாட்களாக பயிற்சி நடைபெற்று வந்துள்ளது. ஆனால் பயிற்சி முடிந்த 15-ஆம் தேதிக்கு பின்னர் சமூக வலைத்தளங்க ளில் வெளியான வீடியோவை வைத்து  ராஜஸ்தான் காவல்துறையினர் விசாரணையில் இறங்கினர். அதன் பிறகு பயிற்சியில் இருந்த சில பாஜக எம்எல்ஏக்கள் மற்றும் ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம் தொண்டர்கள் என பல்வேறு நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தேர்தலுக்காக ஆயுதப் பயிற்சி?

காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்ற தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலை கருத்தில் கொண்டு கடந்த சில மாதங்களாக பாஜக, ஆர்எஸ்எஸ், பஜ்ரங் தளம், விஎச்பி அமைப்புகளின் இந்துத்துவா குண்டர்கள் வெறுப்புப் பேச்சு, பசுவதை என்ற பெயரில் வன்முறை, சிறும்பான்மையினர் மீது தாக்குதல் என பல்வேறு அராஜகச் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ஒரு  படி மேலே சென்று கூரிய ஆயுதங்களு டனும், துப்பாக்கிகளால் சுட்டும் தீவிர ஆயுத பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.
 

\