ஜெய்ப்பூர் பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானியின் பல்வேறு முறைகேடுகள் தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்ற மக்க ளவை மற்றும் மாநிலங்களவையில் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் ஆவேசமாக தொடர்ந்து கிளர்ச்சி யில் ஈடுபட்டு வருகின்றனர். அதானி யின் முறைகேடுகளை விவாதிக்க அஞ்சும் ஒன்றிய அரசு, பதிலுக்கு அமளியில் ஈடுபட்டு வருகிறது. இத னால் நாடாளுமன்ற இரு அவை களும் கடந்த ஒருவாரத்திற்கு மேலாக முடங்கிக் கிடக்கின்றன.
இந்நிலையில், “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்களின் ஆவே சத்திற்கு அஞ்சி நாடாளுமன்றத்திற்கு வராமல் ஓடி ஒளிந்து வரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சி என்ற பெயரில் அதானியுடன் ஊர் சுற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை அன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் “ரைசிங் ராஜஸ்தான்” என்ற பெயரில் உச்சி மாநாடு நடைபெற்றது. ராஜஸ்தான் பாஜக முதல்வர் பஜன்லால் சர்மா தலைமையில் நடை பெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருடன் அதானி உள்ளிட்ட தொழிலதிபர்களும் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அதானி குழுமம் ராஜஸ்தானில் ரூ.7.5 லட்சம் கோடி அளவில் பல்வேறு துறைகளில் முத லீடுகளை வாரி இறைத்ததாக பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
5 சிமெண்ட் நிறுவனங்களுக்கு சிக்கல்
“ரைசிங் ராஜஸ்தான்” மாநாடு மூலம் அதானி ராஜஸ்தானில் சிமெண்ட் தொழிலுக்காக பல ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்ய உள்ளார். இந்த முதலீட்டால் ராஜஸ்தானில் முன்னணி சிமெண்ட் உற்பத்தி நிறுவனமாக உள்ள ஸ்ரீ சிமெண்ட், ஜேஎஸ்டபிள்யு, மங்க ளம், ஜேகே, பினானி உள்ளிட்ட 5 நிறு வனங்கள் காணாமல் போகும் என வர்த்தக நிபுணர்கள் தகவல் தெரி வித்துள்ளனர். அதானி சிமெண்ட் வர்த்தகத்தில் காலடி வைத்ததால், நாட்டின் மிகப்பெரிய சிமெண்ட் நிறுவனங்களில் ஒன்றான அம்புஜா நிறுவனம் தனது இருப்பை இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதானிக்கு நெட்டிசன்கள் கண்டனம்
“ரைசிங் ராஜஸ்தான்” மாநாட்டின் பொழுது ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா, பிரதமர் மோடிக்கு தலைப் பாகை அணிவித்தார். தலைப்பாகை அணிவிக்க பிரதமர் மோடி எழுந்த பொழுது ராஜஸ்தான் அமைச்சர்கள், தொழிலதிபர்கள் என அனைவரும் எழுந்து நின்று மரியாதை அளித்தனர். ஆனால் மோடி க்கு அருகே முன் வரிசையில் அமர்ந்து இருந்த அதானி எழுந்திருக்கா மல், கால் மேல் கால் போட்டு அப்படியே உட்கார்ந்து இருந்தார். தன்னுடை ய நண்பர் என்றாலும், பிரதமர் பதவியில் இருக்கும் மோடிக்கு மரி யாதை அளிக்க வேண்டும் என நெட்டிசன்கள் வீடியோ மூலம் அதானிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.