states

img

கோட்டா பயிற்சி மையத்தில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை!

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பயிற்சி மையத்தில் பீகாரை சேர்ந்த மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், ஐஐடி-ஜே.இ.இ தேர்வுக்கான பயிற்சி பெற்று வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த வால்மீகி பிரசாத் (18) என்ற மாணவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மாணவரின் உடலை மீட்டு, உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளது. 

ஏற்கனவே கோட்டா நகரில் நுழைவுத் தேர்வுக்காக பயிற்சி மேற்கொண்டு வந்த 15 மாணவர்கள் கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த ஆண்டில் மட்டும் கோட்டா நகரில் இது போன்று 20 மாணவர்களும், இந்த மாதத்தில் 4 மாணவர்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.