states

img

300 விவசாயிகள் இறந்ததற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை..... மோடியும் அமித்ஷாவும் தவறான பாதையில் செல்கின்றனர்...

ஷில்லாங்:
வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 300 விவசாயிகள் உயிரிழந்ததற்கு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. தில்லி விவசாயிகள் போராட்ட விஷயத்தில் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் தவறான பாதையில் செல்கின்றனர் என்று மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக் குற்றம்சாட்டியுள்ளார்.அரியானா மாநில பாஜக - ஜே.ஜே.பி கூட்டணி அரசுக்கு ஆதரவளித்து வந்த சுயேட்சைஎம்எல்ஏ சோம்பீர் சங்வான், மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர்  கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் வாபஸ் பெற்றார். 

சோம்பீர் சங்வான் எம்எல்ஏ மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்கிற்கு சில வாரங்களுக்கு முன் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதினார். இதற்கு பதிலளித்து ஆளுநர் சத்ய பால் மாலிக், சோம்பீர் சங்வானுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:விவசாயிகள் போராட்டம் மற்றும் விவசாய சட்டங்கள் குறித்து நீங்கள் எழுதிய விரிவான கடிதம் எனக்கு கிடைத்தது.தில்லியில் போராடும் விவசாயிகளை வெறுங்கையுடன் அனுப்பக்கூடாது என்று ஏற்கனவே பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் எடுத்துக் கூறினேன்.

விவசாயிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், அவர்களின் உண்மையான கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினேன். விவசாயிகளின் குரல்களை அடக்கக்கூடாது என்பதை தெளிவுபடுத்தினேன். அவர்களின் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்க வேண்டும். உங்களுக்கு (விவசாயிகள்) கொடுத்த வாக்குறுதியில் இருந்து விலக மாட்டேன். வருகிற மே முதல் வாரத்தில் தில்லிக்கு வருகிறேன். அப்போது விவசாயத் தலைவர்களை சந்தித்து, உங்களுக்கு ஆதரவான ஒரு தீர்வைக் காண முயற்சிக்கிறேன். இந்த போராட்டத்தில் அமைதியான முறையில் ஈடுபட்ட 300 விவசாயிகள் தங்களது உயிர்களை இழந்துள்ளனர். மத்திய அரசு இதுகுறித்து வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதுகவலை அளிக்கிறது. பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதையும், அவர்கள் விவசாயிகள் மீது தேவையற்ற அழுத்தத்தை கொடுக்க முயற்சிக்கக் கூடாது என்பதை அவர்களிடம் அப்போது வலியுறுத்த முயன்றேன் இவ்வாறு கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

;