மும்பை, ஜன.7 - நாட்டில் வேலையின்மை அதிகரித்து வருவதால் இளைஞர்களுக்கு வேலையும் கிடைக்கவில்லை, திருமணத்திற்கு பெண்ணும் கிடைக்கவில்லை, அதனால் அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் உள்ளனர் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். இவ்வாறு வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்றவை முக்கியப் பிரச்சனைகளாக இருக்கும் நிலையில், அதனைக் கவனத்தில் கொள்வ தற்குப் பதில், மதம், சாதி என்ற பெயரில் இரு சமூகத்தினருக்கு இடையே சண்டையை மூட்டி விடுகிறது என்றும் சரத்பவார் விமர்சித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘ஜன் ஜகர் யாத்ரா’ என்ற நடைபயணத்தை தொடங்கி வைத்து சரத் பவார் பேசியுள்ளார். அப்போது அவர் மேலும் கூறியிருப்பதாவது: “நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதால், அது சமூகப் பிரச்சனை யாக உருவெடுத்துள்ளது. இன்றைய இளைஞர்கள் படித்தவர்கள். அவர்க ளுக்கு வேலை கேட்கும் உரிமை உள்ளது.
சுற்றுப் பயணங்களின்போது கிராமங்களை பார்வையிடுவது எனது வழக்கம். அவ்வாறு ஒருமுறை கிராமத்திற்குச் சென்றபோது 25 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்கள் 15-20 பேர் வேலைக்குச் செல்லாமல் அரட்டைய டித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் பேசினேன். அவர்களில் பலர் பட்டதாரிகள், சிலர் முதுநிலை பட்டதாரிகள். ஆனால் அவர்கள் யாருக்கும் வேலை கிடைக்கவில்லை. வேலை இல்லாததால் திருமணத்திற்குப் பெண் கிடைக்கவில்லை என கூறினர். இது அந்த கிராமத்தில் மட்டுமல்ல, மாநிலம் முழுவதும் இதே நிலை தான். வேலை கிடைக்காததால், பல இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள முடியாமல் தவிக்கின்றனர். வேலையில்லாத நபர்களுக்கு பெண் கொடுக்க யாரும் தயாராக இல்லை. அவர்களுக்கு வேலை கொடுப்பது, சுய தொழி லுக்கு அவர்களை ஊக்குவிப்பது என்பதில் ஈடுபடாமல், பாஜக அரசோ மதம், சாதி என்ற பெயரில் சமூகங்களுக்கு இடையே பிளவை உருவாக்கி வருகிறது. நாட்டின் பணவீக்கம் மற்றும் வேலையின்மை போன்ற உண்மையான பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைத் திருப்புகிறது. தொழில் நிறுவனங்கள் மகாராஷ்டிராவை விட்டு வெளியேறுகின்றன. தற் போதுள்ள தொழிற்சாலைகளுக்கு எந்த ஊக்கத்தொகையும் வழங்கப்பட வில்லை.
வேலையின்மை அதிகரித்து வரும் நிலையில், புதிய தொழிற் சாலைகளையும் உருவாக்கவில்லை. தேர்தல் நேரத்தில் வேலைவாய்ப்பை உருவாக்குவதாக வாக்குறுதி வழங்கிவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் இவ்வாறு பாஜக வெறுப்பு அரசியலை செய்து வருகிறது.” இவ்வாறு சரத்பவார் பேசியுள்ளார். மகாராஷ்டிராவில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘மகாராஷ்டிரா மிஷன் 45’ என்ற முழக்கத்தை பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கையில் எடுத்தி ருப்பது குறித்த கேள்விக்கும் சரத் பவார் பதிலளித்துள்ளார். அதில், “மகாராஷ்டி ராவில் 48 மக்களவை தொகுதிகள் உள்ளதால், “மிஷன் 48” என்றுதான் தொடங்கி இருக்க வேண்டும். ஆனால் பாஜக ‘மிஷன் 45’ என்று முழக் கத்தை எழுப்புகிறது. ஜே.பி. நட்டா அந்த கட்சியின் தலைவர். அவரை குடியர சுத் தலைவராக தேர்ந்தெடுக்கும் உரிமை கூட அந்த கட்சிக்கு உள்ளது. ஆனால் ஒன்றிய அதிகாரத்திலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்தபோதும் அவரது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேச சட்டமன்ற தேர்தலில்வெற்றி பெற முடியவில்லை. எனவே பாஜக தலைவர்களின் இதுபோன்ற பேச்சுகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும், ‘லவ் ஜிகாத்’துக்கு எதிராக சட்டம் இயற்றக் கோரி இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்துவது குறித்த கேள்விக்கும் பதிலளித்திருக்கும் சரத் பவார், “ஒன்றிய அதிகாரத்திலும் மாநிலத்திலும் பாஜக ஆட்சியில் இருக்கி றது. அவர்கள் முடிவெடுக்கலாம். யார் எதிர்ப்பு தெரிவித்தது?” என்று எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.