மும்பை, டிச.30- கடந்த நிதியாண்டில், வங்கி மோசடிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இருப்பினும் அவற்றில் சம்பந்தப்பட்ட தொகை பாதியாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதியா ண்டில், மட்டும் மொத்தம் 9,102 மோசடிகள் நடைபெற்றுள்ளதாக வங்கிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தம் 60 ஆயிரத்து, 389 கோடி ரூபாய் அளவுக்கு மோசடிகள் நடைபெற்றுள்ளன. இதுவே, அதற்கு முந்தைய நிதியாண்டில், மோசடிகளின் எண்ணிக்கை 8,702 ஆகவும், மதிப்பு 1.85 லட்சம் லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. கடன் வாங்கியதில் நடைபெறும் மோசடிகளை விட கார்டுகள், ‘ஆன்லைன்’ பரிமாற்றங்களில் மோசடிகள் அதிகரித்துள்ளன. ஒரு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நடைபெற்ற மோசடிகள் குறித்து வங்கிகள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, பொதுத்துறை வங்கிகளை விட, தனியார் துறை வங்கிகள் அதிகமான மோசடிகளை சந்தித்துள்ளன. நடப்பு நிதி யாண்டின் முதல் பாதியில் 5,406 மோசடிகள் பதிவாகி உள்ளன. இவற்றின் மதிப்பு 19 ஆயிரத்து, 485 கோடி ரூபாயாகும். கடன் வழங்குபவர்களால் புகாரளிக்கப்பட்ட மோசடிகளைத் தவிர, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களால் இந்திய ரிசர்வ் வங்கியில் 3.04 லட்சம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.