தர்ஷன் சோலங்கியின் சகோதரி குற்றச்சாட்டு
மும்பை, பிப். 16 - மும்பை ஐஐடி-யில் படித்து வந்த தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவர் தற்கொ லை செய்யவில்லை; அவரைக் கொலை செய்திருக்கிறார்கள் என்று தர்ஷன் சோலங்கியின் சகோதரி குற்றம் சாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதா பாத்தை சேர்ந்தவர் தர்ஷன் சோலங்கி (18). தலித் வகுப்பைச் சேர்ந்த இவர், மும்பை ஐஐடி-யில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ‘பிடெக்’ முதலாமாண்டு சேர்ந்து படித்து வந்தார். கடந்த வாரம் செமஸ்டர் தேர்வு முடிந்து, பெரும்பாலான மாண வர்கள் ஊருக்குச் சென்று விட்ட நிலையில், தர்ஷன் சோலங்கி உள்ளிட்ட சில மாணவர்கள் மட்டும் ஐஐடி விடுதியில் தங்கியிருந்துள்ளனர். இந்நிலையில், கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி மதிய உணவுக்காக மாணவர்கள் சென்றிருந்தபோது, தர்ஷன் சோலங்கி விடுதியின் 7- ஆவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. இந்த சம்பவம் ஐஐடி வளா கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யது. அவரது மரணத்திற்கான கார ணத்தை உறுதிப்படுத்த முடிய வில்லை என போலீசார் தெரிவித்தனர்.
ஆனால், கல்வி வளாகத்தில் சாதிய ரீதியாக காட்டப்பட்ட பார பட்சம், அவமானம் ஆகியவையே மாணவர் சோலங்கியின் தற்கொலை க்கு காரணம் என்று மாணவர்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. “தலித் மாணவர் தர்ஷன் சோலங்கியின் மரணம் தனிப்பட்ட விஷயமல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்; ஐஐடி வளாகத்தில் நிலவும் இடஒதுக்கீட்டு க்கு எதிரான மனநிலை, இடஒதுக் கீட்டில் வருபவர்களை தகுதியற்ற வர்கள் என்று கூறி அவர்களுக்கு காட்டப்படும் பாகுபாடு, இழைக்கப் படும் சாதிய ரீதியான கொடுமைகள் ஆகியவையே தர்ஷன் சோலங்கி யின் மரணத்திற்கு காரணம். இது ஒரு நிறுவனக் கொலை!” என்று ‘அம்பேத்கர், பெரியார், பூலே படிப்பு வட்டம்’ (Ambedkar Periyar Phule Study Circle - APPSC) குற்றம்சாட்டி யிருந்தது. எனினும், தர்ஷன் சோலங்கி தற்கொலை செய்து கொண்ட தற்கான காரணமோ, அதுதொடர்பான கடிதங்களோ கைப்பற்றப்படாதது சந்தேகத்தை அளித்தது. இந்நிலையில் “தனது சகோதர ரின் மரணம் தற்கொலை அல்ல, கொலை!” என தர்ஷனின் மூத்த சகோதரி ஜான்வி சோலங்கி பர பரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
“ஐஐடி-யில் சாதியப் பாகு பாட்டை எதிர்கொள்வதாக பேச்சு வாக்கில் என்னிடம் அவர் கூறியிருக் கிறார் என்றாலும், என் சகோதரர் மன தளவில் எப்போதும் உறுதியாகவே இருப்பார். உணர்ச்சிவயப்பட கூடிய நபரே கிடையாது. ஐஐடி மும்பை-யில் சேர வேண்டும் என்பதற்காகவே எந்த டியூஷனுக்கும் செல்லாமல் இரண்டாவது முயற்சியில் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்று தனது கனவு கல்லூரியில் இணைந்தார். அப்படிப்பட்ட நபர் மனம் உடைந்து தற்கொலை செய்ய வாய்ப்பே இல்லை. எனக்கு யார் மீதும் சந்தேகம் இல்லை. ஆனால் அவரை யாரோ பின்புறம் இருந்து தலையில் அடித்தே கொலை செய்துள்ளனர் என்பது மட்டும் எனக்குத் தெரி கிறது” என்று ஜான்வி சோலங்கி குறிப் பிட்டுள்ளார். ஜான்வி மட்டுமன்றி சோலங்கி குடும்பத்தினரும் இதே போல சந்தேகத்தைக் கிளப்பியுள்ள னர். “எனது மகனின் உடற்கூறாய் வை எங்களின் அனுமதி இல்லா மலேயே அவசர அவசரமாக செய்து விட்டனர். 7-ஆவது மாடியிலிருந்து விழுந்தால் நிச்சயம் ஏதாவது ஒரு காயம் இருக்கும். ஆனால் எனது மகனின் பிரேத பரிசோதனைக்குப் பிறகு நான் பார்த்தபோது அவரது உடலில் காயம் ஏதும் இல்லை. இது எப்படி சாத்தியம்” என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.