மும்பை, டிச. 31 - 2024 மக்களவைத் தேர்தலின் போது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் சரத் பவார் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத் தப்படலாம் என்று அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், பிரதமர் பதவி யை தான் விரும்பவில்லை என்று சரத் பவார் தனது பேட்டியில் மனம் திறந்துள்ளார். மராத்திய நாளிதழான ‘லோக்சட்டா’-வுக்கு விரிவான பேட்டி ஒன்றை சரத் பவார் அளித்துள் ளார். அதில், பல்வேறு விஷயங் களை பகிர்ந்து கொண்டுள்ள சரத் பவார், 2024 மக்களவை தேர்தல் முடிவு வெளியான பிறகு, நீங்கள் பிரதமராக வாய்ப்புள்ளதா? என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
அதில், “அரசாங்கத்தை வழி நடத்துவதை விட அரசாங்கத் திற்குத் தலைமை தாங்கும் நபரை ஆதரித்து வழிகாட்டவே விரும்பு கிறேன்” என்று அவர் தெரி வித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் விரை வில் நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் பற்றிய கேள்விக்கு பதி லளித்துள்ள பவார், “உ.பி.யில் இப்போது 50:50 வாய்ப்பு உள் ளது. தெளிவான வெற்றியாளர் இல்லை. உத்தரப் பிரதேசத்து க்கு அடிக்கடி சென்று பிரதமர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் திட்டங்களை அறிவித்துக் கொண்டே இருக்கிறார். இதுவே பாஜக-வின் நிலையை நன்றாக எடுத்துக் காட்டுகிறது” என்று கூறியுள்ளார். 2019 மகாராஷ்டிரா தேர்த லுக்குப் பிறகு பாஜக தனது கட்சியுடன் கூட்டணி வைக்க ஆர்வமாக இருந்ததாகவும், ஆனால் “அத்தகைய கூட்டணிக்கு, தான் ஆதரவாக இல்லை; அது சாத்தியமில்லை” என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்து விட்டதாகவும் ஒரு தகவலை சரத் பவார் வெளியிட்டுள்ளார்.