மும்பை பிரதமர் மோடியின் மிக நெருங்கிய நண்ப ரும் ரிலையன்ஸ் குழுமத் தலைவருமான முகேஷ் அம்பானி தனது மகன் ஆனந்த் திருமணத்திற் காக மொத்த சொத்து (ரூ.1.25 லட்சம் கோடி) மதிப்பில் 1% மட்டும் (ரூ.5,000 கோடி) செல விட்டு 2 வாரத்திற்கு முன்பு மும்பையில் திருமணத்தை நடத்தி முடித்தார். ரூ.5,000 கோடி செலவில் திருமணம், உலகளவில் பிரபலமான வர்கள் பங்கேற்ற்றுள்ளதாக கூறி அம்பானி வீட்டு வாசல் மற்றும் திருமணம் நடை பெற்ற இடமான ஜியோ காம்ப்ளக்ஸ் பகுதியில் ஜூலை 10 முதல் 13 வரை பாஜக ஆதரவு ஊடகங்களான “கோடி மீடியா” ஊடகங்கள் குடியிருந்தன
அம்பானி மகன் திருமண காலகட்டமான ஜூலை 8 முதல் ஜூலை 14 வரை கனமழை வெளுத்து வாங்கிய நிலை யில், மும்பை நகரம் வெள்ளத் தில் தத்தளித்தது. ஆனால் மும்பை வெள்ளம் தொடர்பாக “கோடி மீடியா” ஊடகங்கள் சாதாரண செய்தியாக கூட ஒளிபரப்பாமல் அம்பானி மக னின் திருமணத்தை மட்டுமே தலைப்பைச் செய்தியாக ஒளிபரப்பியது. தற்பொழுதும் கூட கொஞ்சமும் இடைவெளி இன்றி மும்பையில் கனமழை புரட்டியெடுத்து வரும் நிலை யில், இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஸ்டோக் பார்க் நட்சத்திர விடுதியில் ஆனந்த் அம்பானியின் வரவேற்பு நிகழ்வு பற்றியும், தேனிலவு கொண்டாட்டம் பற்றியும், பாரீஸ் ஒலிம்பிக் அம்பானி குடும்பம் பங்கேற்றது குறித் தும் “கோடி மீடியா” ஊடகங் கள் தொடர்ச்சியாக மிக முக்கிய செய்தி என்ற பெயரில் செய்தி தொகுப்புகளை வெளியிட்டு வருகின்றன.