மும்பை, செப்.17– மகாராஷ்டிரா மாநிலத்தில் வேதாந்தா- பாக்ஸ்கான் நிறுவனங்கள் இணைந்து பிரம் மாண்ட செமிகண்டக்டர் தயாரிப்பு ஆலையை அமைக்க திட்டமிட்டன. ரூ.1 லட்சத்து 54 ஆயிரம் கோடியில் அமைக் கப்படுவதாக இருந்த இந்த திட்டம் திடீரென மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைக்கப்படாது என்றும், அது குஜராத் மாநிலத்திற்கு மாற்றப் படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த புதிய ஆலை திட்டத்தால், மகாராஷ்டி ராவில் சுமார் 1 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலை யில், அது குஜராத் மாநிலத்திற்கு மாற்றப் பட்டது மகாராஷ்டிரா மக்களுக்கு பெரும் ஏமாற்றமாகப் போனது. முன்பு அறிவித்தபடி மகாராஷ்டிராவிலேயே செமிகண்டக்டர் தொழிற்சாலையை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர். இதனிடையே, வேதாந்தா – பாக்ஸ்கான் ஆலைத் திட்டத்தைக் கைப்பற்றியதற்காக, குஜராத் முதல்வர் பூபேந்தர் படேலுக்கு பிரத மர் மோடி வாழ்த்து தெரிவித்தது மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி களைக் கொந்தளிக்க வைத்தது. பிரதமர் மோடிக்கும், பாஜகவுக்கும் அக்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் அமைக் கப்படவிருந்த வேதாந்தா-பாக்ஸ்கான் ஆலை குஜராத்திற்கு கொண்டு செல்லப்பட்டதைக் குறிப்பிட்டுப் பேசியிருக்கும் காங்கிரஸ் மாநி லத் தலைவர் நானா படோல், “மகாராஷ்டிரா பாஜக தலைவர்கள், தில்லியிலுள்ள தங்கள் தலைவர்களின் ஆசியைப் பெற இங்குள்ள (மகாராஷ்டிராவிலுள்ள) அனைத்தையும் கொள்ளையடித்து குஜராத்துக்கு கொடுக் கின்றனர்” என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அவர்கள் (பாஜகவினர்) மும்பையையே கூட குஜராத்துக்கு கொடுத்தாலும் ஆச்சரியப்படு வதற்கில்லை என்றும் கடுமையாக சாடியுள் ளார். இந்த விவகாரம் மகாராஷ்டிராவில் பாஜக வுக்கு எதிரான கடும் அதிருப்தியை ஏற்படுத்தி யுள்ள நிலையில், வேதாந்தா- பாக்ஸ்கான் செமிகண்டக்டர் தொழிற்சாலைக்கு சமமான அல்லது அதைவிட பெரிய திட்டத்தை மகா ராஷ்டிரா மாநிலத்துக்கு தருவதாக பிரதமர் நரேந்திர மோடி, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவிடம் உறுதியளித்திருப்ப தாக மகாராஷ்டிர மாநில பாஜக தலைவர்கள் சமாளிக்கத் துவங்கியுள்ளனர். பாஜக தலைவரும், மகாராஷ்டிர துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸோ, “குஜராத் ஒன்றும் பாகிஸ்தான் கிடையாது. அது சகோதர மாநிலம்தான்” என்றும், வேதாந்தா – பாக்ஸ்கான் தொழிற்சாலை அங்கு செல்வ தால் என்ன பிரச்சனை? என்பதாக கேள்வி எழுப்பியுள்ளார். “அனைத்தையும் தடுப்பது மட்டுமே எதிர்க்கட்சிகளின் கொள்கையாக உள் ளது. இதனால்தான், நம்மால் குஜராத்தை முந்த முடியவில்லை’’ என்றும் பழியை எதிர்க்கட்சி கள் மீது போட்டுள்ளார்.