states

‘வன்முறை மூலம் முஸ்லிம் மக்களை கொல்ல வேண்டும்’

மும்பை, மார்ச் 15 - சிறுபான்மை சமூகத்தை களங்கப் படுத்துவதையே வாடிக்கையாக கொண்டவர் தெலுங்கானா மாநிலத்தின்  கோஷாமஹால் சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் நபிகள் நாயகம்  குறித்து அவதூறாகப் பேசிய விவ காரத்தில் கைதுசெய்யப்பட்டு தற்போது நிபந்தனை ஜாமீனில் உள்ள நிலையில், மகாராஷ்டிராவில் மீண்டும் முஸ்லிம் சமூகத்தை குறிவைத்து மதவெறி கருத்துக்களை கக்கியுள்ளார். மகாராஷ்டிராவின் ஸ்ரீராம்பூர் பொதுக்கூட்டத்தில் பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் பேசுகையில், “அனைத்து முஸ்லிம்களும், இந்தியாவுக்கு எதிரான வர்கள். சட்ட விரோதமான பசு வதை,  பலவந்த மதமாற்றங்கள் போன்ற வற்றின் மூலம் பல்வேறு இந்து விரோத குற்றங்களைச் செய்துள்ளனர். “லேண்ட் ஜிகாத்” என்ற பெயரில் சட்ட  விரோதமாக அரசு நிலங்களை அப கரித்துள்ளனர். அந்த இடங்களை  கையகப்படுத்தி மீட்டு, சத்ரபதி சிவாஜி மகாராஜின் சிலையை அமைப்போம். மகாராஷ்டிராவில் ரூபாலி,  ஊர்வசி, ஷ்ரத்தா ஆகிய மூவரும் லவ் ஜிஹாத்தில் சிக்கிக் கொண்டவர்கள். ஷ்ரத்தா இங்கி ருந்து தில்லிக்கு அழைத்துச் செல்லப் பட்டு ஒரு முஸ்லிமால் 35 துண்டுகளாக வெட்டப்பட்டார்” என  கூறினார். மேலும் வன்முறை மூலம் முஸ்லிம்களைக் கொல்வதற்கும், முஸ்லிம்களின் பொரு ளாதாரப் புறக்கணிப்புக்கும் வெளிப் படையான அழைப்புகளை விடுத்து, இதெல்லாம் நடந்தால்தான் ஒரு இந்து தேசத்தை நிறுவ முடியும் எனக் கூறி, மேடைக்கு கீழே குழுமியிருந்த இந்துத்வா கும்பலுடன் சேர்ந்து “ஜெய் ஸ்ரீராம்” என்று கூச்சலிட்டார். பாஜக எம்எல்ஏ டி.ராஜா சிங் மத வெறிபேச்சுக்களை பேசி 5 நாட்களுக்கு பிறகு புதனன்று அகமத்நகர் மாவட்ட காவல்துறையால் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) பிரிவு 295, 504, 506, 295 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.