states

img

“ஜோஹார் சார்...”

கணேஷ்
பள்ளிக்குள் நுழைந்தவுடன் மாணவர்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர்.  “ஜோஹார் சார்...”என்றனர் ஆசிரியரும் பதிலுக்கு “ஜோஹார்” என்றார். அருகில் நடந்து வந்து கொண்டிருந்த முன்னாள் தலைமையாசிரியர் “அதென்ன ஜோஹார்?” என்று கேட்டார். பல மாதங்களுக்கு முன்பாக நடந்ததை ஆசிரியர் விவரித்தார். அன்றைய செய்தித்தாள்கள் முழுக்க புதிய ஜனாதிபதி யாக திரவுபதி முர்மு பொறுபேற்றார் என்பதுதான். உள்ளே நுழைந்தவுடன், “ஜோஹார்” என்றவுடன் மாணவர்கள் விழிக்கிறார்கள். அமைதி காத்தனர். “நேற்று புது ஜனாதிபதி பதவி ஏத்துக்கிட்டாங்க இல்லையா... அவங்க சொன்ன முதல் வார்த்தையே இதுதான்..” “அப்படினா என்ன சார்..” “வாழ்க வையகம், வாழ்க வளமுடன்னு சொல்றோமே அதுதான்...”  “ஓ..” “இது பழங்குடி மொழில வணக்கம் சொல்ற மாதிரி கூட வெச்சுக்கலாம். திரவுபதி முர்முதான் முதல் பழங்குடியின ஜனாதிபதி. அதனாலதான் அந்த மொழில சொல்லிருக்காங்க..” “பழங்குடி மொழினு ஒண்ணு தனியா இருக்கா சார்..” “ஒண்ணு ரெண்டு இல்ல... 21 மொழி இந்தியாவுல இருக்கு...  அதோட பேச்சு வழக்குல 74 இருக்கு... இன்னும் கூட இருக்கலாம். இதுல அரசியல் சட்டத்தோட எட்டாவது அட்டவணைல இருக்குற 22 மொழில பழங்குடி பேசுற சாந்தாலியும் ஒண்ணு..”  “பழங்குடி மக்கள்னா காட்டுக்குள்ள இருக்குறவங்க தான?...”  “ஆமா... அவங்கதான் காட்டுக்கு சொந்தக்காரங்க.. இன்னிக்கு அங்க இருக்குற அனைத்து வளத்தையும் பாதுகாத்து நமக்காக வெச்சுருக்குறவங்க..” “அப்போ அவங்க பணக்காரங்களா சார்...” “அதுதான் இல்ல... நம்ம நாட்டுல வறுமைல வாடுறவங் கள்ல 25 விழுக்காடு பழங்குடி மக்கள்தான்..

வறுமைல வாடுற வங்கல எப்புடிக் கண்டுபிடிக்குறாங்கனு யாராவது சொல்ல முடியுமா..?” “நாங்க படிச்சுருக்கோம் சார்... ஒரு நாள் வருமானம் 1.90 டாலருக்குக் கீழ இருந்தா வறுமைனு உலக வங்கி நிர்ண யிச்சுருக்கு.. ஒரு டாலர்னா எவ்வளவு சார்..” “இன்னிக்கு 82.18 ரூபாய்.. 1.90 டாலர் எவ்வளவுனு சொல்லுங்க பாப்போம்..” “ரெண்டையும் பெருக்குனா போதும் சார்.. இந்த வருமானம் போதுமா சார்..” “இத வீட்டுல அப்பா, அம்மா கிட்ட பேசுங்க” பள்வி விடுவதற்கான மணி அடித்தது. மாணவர்கள் வெளியில் ஓடி வந்தனர். அப்போது வெளியில் வந்த முன்னாள் தலைமையாசிரியர் வாயிலருகில் நின்ற சில மாணவர்களைப் பார்த்து “ஜோஹார்” என்றார். அவர்களுக்கும் பதிலுக்கு “ஜோஹார்” என்றனர். அப்போது ஒரு மாணவனின் தந்தையும் அங்கே இருந்தார். “அதென்ன ஜோஹார்” என்று கேட்டார். “அதாப்பா... நான் சொல்றேன்...” என்று ஆரம்பித்தார் அந்த மாணவர்.