வடகிழக்கு மாநிலங்களில் ஒன் றான மணிப்பூரில் கடந்த ஒன் றரை ஆண்டாக தொடர்ந்து வன்முறைச் சம்பவங் கள் நிகழ்ந்து வருகின் றன.இந்த வன்முறை க்கு 230க்கும் மேற் பட்டோர் பலியாகி யுள்ளனர். பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே அக திகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், மணிப்பூரை பாது காக்கும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே மோதல் சம்பவங்கள் தலை தூக்கியுள்ளன. 2 நாட்களுக்கு முன் ஜிரி பாம் மாவட்டத்தில் மோங்பங் காவல் நிலையம் அருகே பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் ஷாஜ கான் சுட்டுக்கொல்லப்பட்டார். விசார ணையில் ஷாஜகானுடன் பணியாற்றிய சக கான்ஸ்டபிள் பிக்ரம்ஜித் சிங் தான் அவரை சுட்டுக்கொன்றது உறுதியா னது. இனக்கலவரம் தொடர்பாக பிரச்ச னையால் தான் ஷாஜகான் சுட்டுக்கொல் லப்பட்டார் என செய்திகள் வெளியாகி யுள்ளன.
கடந்த 4 மாதங்களில் இம்பால் பள்ளத் தாக்கு, ஜிரிபாம், பிஷ்ணுபூர், சூரசந்த்பூர் ஆகிய மாவட்டங்களில் ராணுவம், சிஆர் பிஎப், மணிப்பூர் காவல்துறை உள்ளிட்ட வர்கள் மீது குக்கி - மெய்டெய் இனக்குழுக் கள் தாக்குதல் நடத்தியதில் 8க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரி ழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.