states

img

மணிப்பூர் பற்றி ஜனாதிபதி பேசியிருக்க வேண்டும்

வியாழனன்று நாடாளு மன்றத்தில் ஜனாதிபதி திரவு பதி முர்மு ஆற்றிய உரைக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், “இந்தியா” கூட்ட ணியில் அங்கம் வகிக்கும் சிபிஐ (எம்-எல்) கட்சியும் ஜனாதிபதி உரை க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் நாடா ளுமன்ற உறுப்பினர் சுதாமா பிரசாத் கூறுகையில்,”தற்போது இருப்பது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆகும். ஆனால் ஜனாதிபதி உள்ளிட்ட பாஜக வினர் இதை பெரும்பான்மை அரசு என்று கூறி வருகின்றனர். ஜனாதிபதி ஒரு பெண்ணாக மணிப்பூர் பற்றி பேசியிருக்க வேண்டும். அங்கு பெண்கள் முழு நிர்வா ணமாக இழுத்துச் செல்லப்பட்டனர். மக்கள் வீடற்றவர்களாக மணிப்பூரில் ஆக்கப்பட்டு பெரும் துயரத்தில் உள்ள னர். இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்த மல்யுத்த வீராங்கனைகளுக்கு இன்னும் நமது நாட்டில் நீதி கிடைக்கவில்லை. இதை எதையும் பேசாமல் மேம்போக்காக பாஜக எழுதிக் கொடுத்ததை பேசிய ஜனாதிபதி உரை என்பது முழுப் பொய் களால் நிரம்பி உள்ளது” எனக் கூறி கண்ட னம் தெரிவித்துள்ளார்.