மணிப்பூர் மாநிலத்தின் காமென்லோக் பகுதியில் நேற்று இரவு நடத்த கலவரத்தில், 9 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர்.
பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் மெய்டெய் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினர் தங்களைப் பட்டியலின பழங்குடியினர் சமூகத்தில் இணைத்து அதற்கான அந்தஸ்து வழங்க வேண்டும் என மாநில அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதற்கு குக்கி பழங்குடியின சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பழங்குடியினர் மாணவர் அமைப்பு கடந்த மே 3-ஆம் பேரணி நடத்திய போது, கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 98 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், காமென்லோக் பகுதியில் நேற்று இரவு மீண்டும் கலவரம் நடத்தது. இதில், 9 பேர் பலியாகியுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர். வீடுகள் மீது குண்டுகளை வீசியும், தாக்குதலிலிருந்து தப்பிக்கும் நோக்கில் வீட்டை விட்டு வெளியே வந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.