states

img

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச் சூடு

மணிப்பூர் மாநிலத்தின் ஜிரிபாம் மாவட்டத்தில் அமைந்துள்ள மோங்பங் கிராமத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் ஆளும் பாஜக அரசு பற்றவைத்த பழங்குடியினர் அந்தஸ்து வழங்குவது தொடர்பான வாக்கு வங்கி அரசியல், குக்கி மற்றும் மெய்டேய் ஆகிய இரண்டு பிரிவினர் இடையிலான மோதலாக மாறி தற்போது வரை வன்முறை நடந்து வருகிறது

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் ஜிர்பாம் மாவட்டத்தில் மீண்டும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது.

இந்த தாக்குதலுக்கு கிராமத்தில் உள்ள தன்னார்வலர்கள் பதில் தாக்குதல் கொடுத்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இருப்பினுன் இந்த துப்பாக்கிச் சூட்டில் யாரும் காயமடையவில்லை என்ற தவலும் வெளியாகி உள்ளது.

காவல்துறையினருக்கு துப்பாக்கிச் சூடு குறித்த தகவல் கிடைத்ததும் செவ்வாய்கிழமை இரவு அங்கு நிலவும் பதற்ற சூழலை கட்டுப்படுத்தும் நோக்கில் பாதுகாப்புப் படையினர் விரைந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்ற கிராமத்தில் ட்ரோன்கள் பறந்ததாக கிராம மக்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். திங்கள்கிழமை கிழக்கு இம்பால் பகுதியில் உள்ள கிராமத்தில் மேற்கொண்ட சோதனையில் வெடிமருந்து துப்பாக்கி தோட்டாக்கள் போன்றவற்றை பாதுகாப்பு படையினர் கைப்பற்றியுள்ளனர்.