states

img

முதல்வராக இருந்தும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை : ஆனாலும் ராஜினாமா செய்ய மாட்டேன்

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகி றது. முதல்வராக பைரன் சிங் உள்ள நிலையில், பாஜகவின் வகுப்புவாத அரசியல் ஆதாய நிகழ்ச்சி நிரலான மெய்டே - குக்கி இன மக்களிடையே மோதலை தூண்டிவிட்டு, சுமார் ஒன்றரை வருடமாக மணிப்பூர் மாநி லம் வன்முறையால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இந்த வன்முறை யால் மாநிலம் முழுவதும் 220க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலை யில், பல லட்சம் மக்கள் சொந்த மாநிலத்திலேயே வீடுகளை இழந்து அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர். இந்த வன்முறைக்கு காரணமான பாஜக முதல்வர் பைரன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்தாலே மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் குறைந்துவிடும். அதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. 

ஆனால் முதல்வர் பைரன் சிங், ‘‘ராஜினாமா செய்ய மாட்டேன்” என மணிப்பூரில் மேலும் வன்முறையை தூண்டும் வகையில் கொக்கரித்துள் ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் கூறுகை யில்,“நான் ஏன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்? தேசத் திற்கோ அல்லது மாநிலத்திற்கோ எதிராக வேலை செய்தேனா? அத னால் முதல்வர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை. 6 மாதங்க ளுக்குள் மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுப்பேன். உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் வந்த தால், பிரதமர் வந்தாலும் வராவிட்டா லும் மக்களுக்கு பிரச்சனை இல்லை. முதல்வராக இருந்தும், எனது கட்டளையின்படி படைகள் இருந்த போதிலும் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை” என அவர் கூறினார். பைரன் சிங்கின் இந்த பேச்சிற்கு குக்கி இன குழுக்கள் கண்டனம் தெரி வித்துள்ளதாக தகவல் வெளியாகி யுள்ளது.

“மணிப்பூருக்கு நோ”
 புரூனே, சிங்கப்பூருக்கு பறக்கும் மோடி

ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வாரத்தில் பிரதமர் மோடி ரஷ்யா, போலந்து, உக்ரைன் நாடு களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலை யில், செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள தீவு நாடான புரூனே நாட்டிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் புரூனேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, 4ஆம் தேதி சிங்கப்பூருக்கு செல்கிறார். 5ஆம் தேதி வரை பிரதமர் மோடி சிங்கப்பூரில் தங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

“உலக அமைதிக்கு பாடுபடும் 
பிரதமர் மணிப்பூர் செல்லாதது ஏன்?”

“உலகம் முழுவதும் அமைதியை ஏற்படுத்த பாடுபடும் நபராக பிரத மர் மோடி செயல்பட முடியும் என்றால் மணிப்பூரில் ஏன் அமைதி யை ஏற்படுத்தவில்லை” என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. 

இதுதொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,”உயிரியல் இல்லாத பிரதமர் மோடி போர் முனைப்பகுதியான உக்ரைன், ரஷ்யாவிற்கு சென்று அங்கு அமைதியை ஏற்படுத்த முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் கல வரம் காரணமாக 16 மாதங்களாக பற்றி எரியும் மணிப்பூருக்குச் சென்று,  அங்கு அமைதியை ஏற்படுத்த பிரதமர் மோடி சிறிதளவு கூட முயற்சிக்க வில்லை. மோடி மணிப்பூருக்கு வர தேவையில்லை என அம்மாநில முதல்வர் கூறுவது ஏற்புடையது அல்ல” என அவர் குற்றம் சாட்டினார்.