இம்பால், ஜுன் 2 - பழங்குடியினர் அந்த ஸ்து தருவதாக ஆளும் பாஜக பற்ற வைத்த நெருப்பு, மணிப்பூரில் மெய் டெய் சமூகத்தினருக்கும், அங்குள்ள குக்கி, நாகா பழங்குடியினருக்கும் இடை யிலான வன்முறையாக மாறியது. மே 3-ஆம் தேதி கொளுந்து விட்டெரியத் துவங்கிய இந்த வன்முறை தற்போதுவரை அணைந்தபாடில்லை. இது வரை 120-க்கும் அதிக மானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ள னர். வீடுகள், கடைகள், வாகனங்கள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப் பட்டு நிற்கின்றன. 10 ஆயி ரத்திற்கும் அதிகமான ஆயு தப்படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள னர். இந்நிலையில், 5 மாவட்டங் களில் முழுமையாகவும், மற்ற மாவட்டங்களில் பகுதியளவிலும் ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.