states

img

மணிப்பூரில் இன்று மீண்டும் புதிய வன்முறை - 3 பேர் கொலை

மணிப்பூர் காங்போஃபி மாவட்டத்தில் இன்று காலை 7 மணிக்கு நடந்த வன்முறையில் குக்கி இனத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில், கடந்த மே மாதம் முதல் மெய்டெய் மற்றும் குக்கி சமூகத்தினர் இடையே மோதல் நடந்து வருகிறது. இந்த வன்முறையில், இதுவரை 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அம்மாநில பாஜக அரசு வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. இந்த நிலையில், இன்று 7 மணிக்கு காங்போஃபி மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குக்கி இனத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 
சம்பவத்தில் ஈடுபட்ட ஆயுதக் குழுவினர் ஒரு வாகனத்தில் வந்து இரங், கராம் பகுதிகளில் தாக்குதலில் ஈடுபட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.