states

img

மகாராஷ்டிரா: 10 மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிராவில் 10 மாதங்களில் 2,366 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அம்மாநில நிவாரணம் மற்றும் மறுவாழ்வுத் துறை அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல் அம்மாநில சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி வருவாய் கோட்டத்தில் அதிக பட்சமாக 951 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அம்மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ குணால் பாட்டீல், அம்மாநில சட்டப்பேரவையில் கேட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் அனில் பைதாஸ் பாட்டீல், இந்த ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை 2,366 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகவும், அமராவதி வருவாய் கோட்டத்தில் 951 விவசாயிகளும், சத்ரபதி சம்பாஜிநகர் கோட்டத்தில் 877 பேரும், நாக்பூர் கோட்டத்தில் 257 பேரும், நாசிக் கோட்டத்தில் 254 பேரும், புனே கோட்டத்தில் 27 பேரும் தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.