states

img

மும்பை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய தீயணைப்பு டிரோன்!

மும்பை ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய தீயணைப்பு டிரோன்களை மும்பை தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறனர்.

மும்பையில் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாத நெருக்கடி மிகுந்த இடங்களில் டிரோன்கள் மூலம் தீயை அணைப்பதற்கான திட்டம் குறித்து மும்பை ஐஐடி ஏரோநாடிகல் துறையினருடன் கடந்த 2 ஆண்டுக்கு முன் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் 250 முதல் 300 மீட்டர் உயரத்துக்குப் பறக்கும் டிரோன்கள் தேவை என்று தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன் மூலம் 80வது மாடியில் பற்றி எரியும் தீயை படம் பிடிப்பதுடன் நிமிடத்துக்கு 300 லிட்டர் தண்ணீரை எடுத்துச் சென்று பீய்ச்சி அடித்து அணைக்க வேண்டும் என்றும், அந்த டிரோன் 2 மணிநேரம் பறக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் மும்பை ஐஐடி மாணவர்கள் 50 மீட்டர் உயரத்துக்குப் பறக்கும் 100 கிலோ எடையுள்ள கேமராவுடன் கூடிய தீயணைப்பு டிரோன்களை உருவாக்கியுள்ளனர். இந்த டிரோன்களை மும்பை தீயணைப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால் விரைவில் இந்த டிரோன்கள் தீயணைப்பு படையில் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.