states

img

சிவாஜி சிலை இடிந்த விவகாரம்: சிற்பி கைது

மகாராஷ்டிரா ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயரச் சிலை இடிந்து விழுந்த விவகாரம் தொடர்பாக, அச்சிலையை செதுக்கிய சிற்பி ஜெயதீப் ஆப்தே கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாராஷ்டிராவின் சிந்துதூர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக சிவாஜி சிலை இடிந்து விழுந்து உடைந்தது. 
இது தொடர்பாக, வடிவமைப்பாளர் சேத்தன் பாட்டில் மற்றும் சிற்பி ஜெயதீப் ஆப்தே ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த வாரம் கோலாப்பூரில் வைத்து சேத்தன் பாட்டில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், சிலையை செதுக்கிய சிற்பி ஜெயதீப் ஆப்தே நேற்று தானே மாவட்டம் கல்யாண் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.