மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதி விபத்தில் குழந்தை உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்கில் இருந்து அவுரங்காபாத் சாலையில் பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பேருந்து, இன்று அதிகாலை 5 மணியளவில் லாரி மீது மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. பேருந்துக்குள் சிக்கிக் கொண்ட பயணிகளில் குழந்தை உட்பட 12 பேர் தீயில் உயிரிழந்துள்ளனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.