மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் விசவாயு தாக்கி உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பர்பானி மாவட்டத்தில் உள்ள பௌச்சா தாண்டாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது, கழிவுநீர் தொட்டியிலிருந்து விசவாயு தாக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், ஒரு தொழிலாளர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சோன்பெத் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.