states

img

மகாராஷ்டிரா பேருந்து தீ விபத்து - 25 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் 10 பெண்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் யவத்மாலில் இருந்து புனே நோக்கி தனியார் பேருந்து ஒன்று 33 பயணிகளை ஏற்றிச் சென்றது. புல்தானாவில் உள்ள சம்ருத்தி மகாமேரி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென பேருந்து கவிழ்ந்து தீப்பிடித்தது. இந்த பயங்கர தீ விபத்தில் 3 குழந்தைகள் மற்றும் 10 பெண்கள் உட்பட 25 பேர் பரிதாபமாக உடல் கருகி உயிரிழந்தனர்;  8 பேர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், டையர் வெடித்ததில் பேருந்து கவிழ்ந்ததும், பின்னர் டீசல் டேங்க் தீப்பிடித்து எரிந்ததும் தெரியவந்தது.