states

img

ஊழலை மறைக்க மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசு தீவிரம்

மும்பை பாஜக கூட்டணி ஆளும் மகா ராஷ்டிரா மாநிலத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் கடந்த ஆண்டு டிசம்பர் 4 அன்று நடைபெற்ற கடற்படை தின விழாவில் 35 அடி உய ரமுள்ள சத்ரபதி சிவாஜி சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.2.44 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த சிவாஜி சிலை 8 மாதம் தாக்குப் பிடிக்க முடியாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் 26 அன்று சாதாரண சாரல் மழைக்கே சுக்கு நூறாக உடைந்து விழுந்தது. 

சிவாஜி சிலை கட்டுமானத்தில் ஊழல் நடந்ததாகவும், பாஜக கூட்டணி அரசின் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பதவி விலக வேண்டும் என்று காங்கி ரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத  காங்கிரஸ் உள்ளிட்ட “இந்தியா” கூட்ட ணிக் கட்சிகள் போர்க்கொடி தூக்கின. மேலும் மாநிலம் முழுவதும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளுடன் பொதுமக்க ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனால் சிவாஜி சிலை ஊழலை மறைக்க பிரதமர் மோடி பகிரங்க மன்னிப்பு கோரிய நிலையில், மகா ராஷ்டிரா பாஜக கூட்டணி அரசும் பல்வேறு சித்து விளையாட்டுகளை அரங்கேற்றி வருகிறது. சித்து விளையாட்டின் தொடக்க வேலை யாக சிவாஜி சிலையை வடிவமைத்த கட்டிட பொறியாளர் சேதன் பாட்டீல் ஆகஸ்ட் மாதம் 30 அன்று கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சிலை யை வடிவமைத்த சிற்பி ஜெய்தீப் ஆப்தேவும் வியாழனன்று ராய்காட் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.