states

மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலிலும் பாஜக குதிரை பேரம்

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள 11 சட்டமேலவை உறுப்பி னர்களுக்கான தேர்தல் வெள்ளி யன்று நடைபெற்றது. ஆளும் பாஜக கூட்ட ணியில், பாஜக சார்பில் 5 வேட்பாளர்க ளும், சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித்) சார்பில் தலா 2 வேட் பாளர்களும் நிறுத்தப்பட்டனர்.

அதே போல எதிர்க்கட்சிகளின் எம்விஏ கூட்டணி சார்பில் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) தலா ஒரு வேட்பாளரும், தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சி ஆதரவுடன், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி நிறுத்திய வேட்பாளர் என எம்விஏ கூட்டணி 3 வேட்பாளர்களை நிறுத்தியது. வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக கூட்டணி 9 இடங்களிலும், எம்விஏ கூட்டணி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

குதிரை பேரம்

ஒரு மேலவை உறுப்பினரை தேர்ந்தெ டுக்க குறைந்தபட்சம் 23 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்படும் என்ற நிலை யில், காங்கிரஸ் கட்சி தனக்கு உள்ள 37 எம்எல்ஏக்களிடம், காங்கிரஸ் வேட்பா ளர் பிரதன்ய சதாவுக்கு 30 எம்எல் ஏக்கள் வாக்களிக்கவும், மீதமுள்ள 7 எம்எல்ஏக்கள் சிவசேனா (உத்தவ்) வேட்பாளர் மிலிந்த் தாக்கரேவுக்கு வாக்களிக்கவும் அறிவுறுத்தியது. ஆனால் தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது பிரதன்ய சதாவுக்கு 25 வாக்குக ளும், மிலிந்த் தாக்கரேவுக்கு 22 வாக்கு களும் மட்டுமே கிடைத்துள்ளன. 

இதையடுத்து, காங்கிரஸை சேர்ந்த 8 எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களித்தி ருக்கலாம் என தெரிய வருகிறது. அதா வது காங்கிரஸின் 37 எம்எல்ஏக்களில் பிரதன்ய சதாவுக்கு 25 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மீதமுள்ள 12 வாக்குகளில் மிலிந்த் தாக்கரேவுக்கு 7 வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளன. ஏற்கனவே மிலிந்த் தாக்கரேவின் 15 வாக்குகளுடன் காங்கிரசின் 7 வாக்குகளும் சேர்த்ததால் அவர் 22 வாக்குகள் பெற்று இரண்டாது சுற்றில் வெற்றி பெற்றார். அதனால் காங்கிரஸின் மீதமுள்ள 5 வாக்குகள் எங்கு சென்றது என்பது தான் கேள்வியாக உள்ளது. சரத்பவார் கட்சி ஆதரவு பெற்ற ஜெயந்த் பாட்டீல் 12 வாக்குகள் பெற்றார். இந்த 12 வாக்குகளும் ஏற்கனவே அவர்க ளிடம் உள்ளவையாகும். மொத்தமாக வெளியான புள்ளி விபரங்களின் அடிப்படையில் பார்த்தால் கிட்டத்தட்ட 7 முதல் 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டு போட்டதாக சட்ட மேலவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் மகாராஷ்டிரா சட்டமேலவை தேர்தலிலும் பாஜக குதிரை பேரம் நடத்தியுள்ளது அம்பல மாகியுள்ளது.