states

img

புனே: ராணுவ பயிற்சி மையத்தில் பெண் அதிகாரி தற்கொலை

புனேவில் உள்ள ராணுவ பயிற்சி மையத்தில் பெண் ராணுவ அதிகாரி புதன்கிழமை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள வான்வாடியில் ராணுவ நுண்ணறிவு பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகின்றது. இங்கு ராணுவம், விமானப்படை, கப்பற்படை அதிகாரிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெய்பூரில் பணிபுரியும் உத்தரகண்ட்டை சேர்ந்த  43 வயதுடைய பெண் லெப்டினன்ட் கர்னல் அதிகாரி மூன்று மாத பயிற்சிக்காக புனே வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரது தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 
இதுகுறித்து புனே காவல்துறையினர் கூறியதாவது
3 மாத பயிற்சிக்காக புனே வந்த பெண் அதிகாரியின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ளது. அவரது கணவர் ராணுவத்தில் லெப்டினன்ட் பதவியில் இருக்கிறார். மேலும், பெண் அதிகாரி தற்கொலைக்கான கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது 

;