states

img

இந்தியாவின் கடனை ரூ. 135 லட்சம் கோடி ஆக்கிய மோடி!

சித்தராமையா சாடல்

பெங்களூரு, ஜன.22- “நாட்டின் கடனை 8 ஆண்டுகளில் 135 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தியதே நரேந்திர மோடி அர சின் சாதனை” என்று காங்கிரஸ் மூத்தத் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல் வருமான சித்தராமையா விமர் சித்துள்ளார். சித்தராமையா வெள்ளியன்று பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: நாட்டில் எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் காங்கிரஸ் கட்சியில் மட்டுமே கொள்கைகள் இருக்கிறது. மதச்சார்பற்ற ஜனதாதளம் சந்தர்ப்ப வாத கட்சியாகும். அந்த கட்சிக்கு என்று கொள்கை எதுவும் கிடையாது. பாஜகவினர், ஆர்எஸ்எஸ் சொல்வ தைக் கேட்டு நடக்கக் கூடியவர்கள். அந்தக் கட்சிக்கு என்று தனிக்கொள்கை எதுவும் இல்லை. பிரதமர் மோடி ஆட்சிக்கு வருவ தற்கு முன்பாக- அதாவது 8 ஆண்டுக்கு முன்பு இந்தியாவின் கடன் ரூ. 53 லட் சம் கோடியாக இருந்தது. ஆனால், இந்த 8 ஆண்டுகளில் இந்தியாவின் கடன் ரூ. 135 லட்சம் கோடியாக உயர்ந் திருக்கிறது.

பாஜக ஆட்சியில் நடந்த பெரிய சாதனை என்றால், அது இது ஒன்று மட்டும்தான். அடுத்தது என் றால், விவசாயிகளுக்கு எதிரான சட் டங்களை கொண்டு வந்ததன் மூலம் 702 விவசாயிகளின் உயிர்கள் பறிக் கப்பட்டு இருக்கிறது. கர்நாடகத்தில் பாஜக ஒரு போதும் மக்கள் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த தில்லை. ‘ஆபரேசன் தாமரை’ திட்டத் தின் மூலமாகவே, எடியூரப்பா பாஜக வை ஆட்சி அமைக்க செய்திருந்தார். மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு எந்த விதமான வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. கமி ஷன் பெறுவதில் மட்டுமே பாஜக-வினர் குறியாக உள்ளனர். 40 சத விகிதம் கமிஷன் கேட்பதாக ஒப்பந்த தாரர்களே பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இதை விட பாஜக-வினர் ஊழலில் ஈடுபடுவதற்கான ஆதா ரம் வேறு எதுவும் தேவையில்லை.  தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் அலை வீசத் தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கி ரஸ் வெற்றிபெற்று ஆட்சியை பிடிப்பது உறுதி. இவ்வாறு சித்தராமையா கூறி யுள்ளார்.