பசவராஜ் பொம்மைக்கு அகில கர்நாடக பிராமண மகாசபை எதிர்ப்பு
பெங்களூரு, ஜன. 11 - உயர்சாதி ஏழைகளுக்கு என்று 10 சதவிகித அளவிற்கு இடஒதுக்கீடு வழங்கலாம் என்று ஒன்றிய பாஜக அரசு 2019-ஆம் ஆண்டு அரசிய லமைப்புத் திருத்தம் கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றமும் அண்மையில் தீர்ப்பு அளித்தது. இதனிடையே, கர்நாடக மாநி லத்தில் உயர்சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், ஒக்கலிகர், லிங்கா யத் பிரிவுகளை கொண்டுவர பசவராஜ் பொம்மை தலைமையிலான கர்நாடக பாஜக அரசு தீர்மானித்துள்ளது. 10 சத விகித இ.டபிள்யு.எஸ். இடஒதுக்கீட் டில், ஒக்கலிகர் மற்றும் லிங்காயத்துக் களுக்கு 6 சதவிகித உள்ஒதுக்கீடு வழங்க முடிவு செய்துள்ளது. கர்நாட கத்திற்கு விரைவில் தேர்தல் வரவுள்ள தால், கர்நாடகத்தின் பெரும்பான்மை சாதிகளை தங்களுக்கு ஆதரவாக திருப்பும் நோக்கில் இந்த திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இந்நிலையில், பசவராஜ் பொம்மை அரசின் இந்த திட்டத்திற்கு, பிராமணர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள் ளது. கர்நாடக அரசாங்கத்தின் நட வடிக்கையை “பிராமணர் விரோதச் செயல்” என்று கூறி, அகில கர்நாடக பிராமண மகாசபையின் தலைவரும் மாநில அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான அசோக் ஹரன ஹள்ளி கொதித்துள்ளார்.
“இ.டபிள்யு.எஸ். இடஒதுக்கீட்டை பிற சமூகங்களுக்கு மறு ஒதுக்கீடு செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவு பிராமண சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாதது. இ.டபிள்யு.எஸ். பிரி வினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை களில் மாநில அரசு பல ஆண்டுகளாக மனம் வைக்கவில்லை. இப்போது 10 சதவிகித இடஒதுக்கீடு வந்தவுடன், அதனைப் பிரித்து குறிப்பிட்ட சில சமூ கங்களுக்கு வழங்கவும், பிரா மணர்களை 2 அல்லது 3 சதவிகிதமாக மட்டுமே கட்டுப்படுத்தவும் முடி வெடுத்துள்ளனர். 2019-ஆம் ஆண்டின் அரசிய லமைப்புத் திருத்தத்தின்படி சமூகத்தில் ஏற்கெனவே பின்தங்கிய பிரிவுகளின் கீழ் ஒதுக்கீட்டை அனுபவிக்கும் சமூ கங்களுக்கு இ.டபிள்யு.எஸ் பிரிவு இடஒதுக்கீட்டை வழங்க முடியாது. ஆனால், ஏற்கனவே பலன்களை அனு பவிக்கும் சமூகங்களுக்கு இ.டபிள்யு.எஸ். இடஒதுக்கீட்டை பங்கிட அரசாங்கம் விரும்புகிறது. இ.டபிள்யு.எஸ். பிரிவு இடஒதுக்கீட்டை இன்னும் மாநிலத்தில் அமல்படுத்தாமல் இருப்பதற்காக அரசு மீது பிராமண சமூகம் ஏற்கெனவே வருத்தத்தில் உள்ளது. இந்நிலையில், கர்நாடக அரசின் இந்த புதிய பிராமண விரோதக் கொள்கை, பிராமணர்களுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று அசோக் ஹரனஹள்ளி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அகில கர்நாடக பிராமண மகா சபையின் எதிர்ப்பைத் தொடர்ந்து, இறுதி முடிவு எடுப்பதற்கு முன், சட்ட வல்லுநர்களுடன் விவாதிக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை, பிராமணர் சமூகத்திற்கு உறுதியளித்துள்ளார். கர்நாடக மாநில மக்கள்தொகை யில் பிராமணர்கள் சுமார் 2 சதவிகிதமே உள்ளனர். எனினும், தங்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீட்டை அப்படியே தரவேண்டும் என்றும்; ஏனெனில் இந்த இடஒதுக்கீடு தங்களுக்காக மட்டுமே கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடுதான் என்றுபிடிவாதமாக கூறிவருகின்றனர்.