states

img

பெங்களூருவில் தனியார் பள்ளி ஒன்றின் வளாகம் முழுவதும் சிவப்பு நிறத்தில் சாரி…யார் அந்த நபர்கள்?  

பெங்களூரு தனியார் பள்ளி ஒன்றின் வளாகம் முழுவதும் சிவப்பு நிறத்தில் சாரி, சாரி என எழுதப்பட்டு இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

பெங்களூருவின் சன்கடகட்டே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகம் மற்றும் சுற்றுச்சுவர்கள் என பள்ளியின் அனைத்து இடங்களில் சாரி சாரி என எழுதப்பட்டிருந்தது. இதைக்கண்ட பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  

இதையடுத்து பள்ளிக்கு வந்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருசக்கர வாகனத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் உணவு விநியோகம் செய்யும் நபர்கள் வைத்திருப்பதைப் போன்ற பெரிய பையிலிருந்து அவர்கள் ஒரு பக்கெட்டை எடுத்து, சாரி என்று எழுதுவது பதிவாகியிருக்கிறது.  

இதுதொடர்பாக யார் இந்த அடையாளம் நபர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இதை மாணவர்கள் யாரேனும் இதை செய்தார்களா எனவும் விசாரணை செய்து வருகின்றனர். 

;