states

img

பிரதமர் என்பதை உணர்ந்து பேசுங்கள்; அழாதீர்கள்? நீங்கள் ஏழைத்தாயின் மகனென்றால் நாங்களெல்லாம் யார்?

பெங்களூரு, மே 4 - பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில்  சொல்ல வேண்டும்; அழக் கூடாது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார். கர்நாடக மாநிலம் பீதரில் நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி யிடம் பல்வேறு கேள்விகளை அவர்  எழுப்பினார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:   “பிரதமர் நரேந்திர மோடி தன்னை ஏழை தாயின் மகன் என்கிறார். காங்கிரஸ் என்னை 91 முறை துஷ்பிர யோகம் செய்தது என்கிறார். இவ்வாறு  அவர் பேசுவது முதல் முறையல்ல. தொடர்ந்து, காங்கிரஸ் மீது இந்தக் குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். நீங்கள் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த வர் என்றால் மற்றவர்கள் யார்? மேலும், நான் என்ன நீங்கள் அரச குடும் பத்தைச் சேர்ந்தவர் என்றுகூறினேனா? ஆனால் நான் எப்போதும், என்னை ஒரு கடின உழைப்பாளியின் மகன் என்று சொல்வேன். நான் யாரையும் நம்பி வாழ்ந்ததில்லை. என் தந்தை கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் என்னை வளர்த்தார், என்னைப் படிக்க  வைத்தார். மேலும் அநீதி இழைப்பவர் களை எதிர்த்து போராடவும் கற்றுக் கொடுத்தார். உங்களிடம் இருப்பவர்கள் எல்லாம், ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் 40 சதவிகிதம் கமிஷன் வாங்கும் ஆட் கள்தான். ஆனாலும் நீங்கள் இன்னும் அழுகிறீர்கள்? நீங்கள் இந்த நாட்டின்  பிரதமர் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள். தயவுசெய்து அழாதீர்கள். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசியுள்ளார்.