பெங்களூரு, மார்ச் 28 - ரூ. 7 கோடியே 72 லட்சம் லஞ்சம் வாங்கிக் குவித்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் முன்ஜாமீனை ரத்து செய்த பின்ன ணியில், பாஜக எம்எல்ஏ மதல் விருபாக் சப்பா லோக் ஆயுக்தா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கர்நாடகா அரசுக்கு சொந்தமான கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடெட் (Karnataka Soaps and Detergents Limited - KSDL) நிறுவ னத்தின் தலைவராக இருந்தவர் சென்ன கிரி தொகுதி பாஜக எம்எல்ஏ மதல் விருபாக் சப்பா ஆவார். அண்மையில், கர்நாடகா சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் லிமிடெட்டின் மூலப்பொருட்களுக்கான டெண்டர் வழங்க, எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா சார்பில் அவரது மகன் பிரசாந்த் மதல், காண்ட்ராக் டர் ஒருவரிடம் ரூ. 40 லட்சம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக மாட்டினார். இதுதொடர்பாக பிரசாந்த் மதலை கைது செய்த லோக் ஆயுக்தா போலீசார், ஊழல் தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்து, அவரது வீடு, அலுவலகத்தில் அதிர டியாக சோதனை நடத்தினர். அப்போது அலு வலகத்திலிருந்து ரூ. 1 கோடியே 72 லட்சம், வீட்டிலிருந்து ரூ. 6 கோடி என ஒட்டுமொத்த மாக ரூ. 7 கோடியே 72 லட்சம் லஞ்சப் பணம் பிடிபட்டது.
இவ்விவகாரத்தில் பிரசாந்த் மதல் மட்டும் கைது செய்யப்பட்ட நிலையில், எம்எல்ஏ மதல் விருபாக்சப்பா, தலைவர் பத வியை ராஜினாமா செய்துவிட்டு தலை மறைவானார். அவரை கைது செய்யக் கோரி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி யினர் போராட்டம் நடத்தி வந்தனர். விசாரணைக்கு ஆஜராகுமாறு, லோக் ஆயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பியும், மதல் விருபாக்சப்பா ஆஜராகவில்லை. மாறாக, கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார். உயர் நீதிமன்றமும், மதல் விரு பாக்சப்பாவுக்கு ரூ. 5 லட்சம் பிணைத் தொகை மற்றும் லோக் ஆயுக்தா போலீசாரின் விசார ணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற உத்தரவாதத்துடன் கூடிய நிபந்தனையின் பேரில், கடந்த மார்ச் 7 அன்று இடைக்கால ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்று திரும்பிய மதல் விருபாக்சப்பாவுக்கு- ஏதோ குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலையானவர் போல- பாஜக தொண்டர்கள், பட்டாசுகளை வெடித்தும், மலர்களைத் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனிடையே, மதல் விருபாக்சப்பா விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று லோக் ஆயுக்தா போலீசார் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி கே. நடராஜன் தலைமையிலான அமர்வு, கடந்த மார்ச் 25 அன்று மதல் விரு பாக்சப்பாவின் முன்ஜாமீனை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், திங்களன்று துமகூரு டோல்கேட் அருகே காரில் சென்று கொண்டிருந்த எம்எல்ஏ மதல் விருபாக் சப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர்.