states

img

குழந்தைகளிடம் மதவெறி விஷத்தை புகுத்தும் பாடத்திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்!

பெங்களூரு, மே 30 - புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் கல்வியில் வகுப்புவாதத்தை புகுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரி வித்துள்ளார்.  கர்நாடகாவில் சித்தராமையா தலை மையிலான காங்கிரஸ் அரசு ஆட்சி பொ றுப்பேற்றுள்ள நிலையில், 40-க்கும்மேற்பட்ட எழுத்தாளர்கள் சித்தராமையாவை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தனர். கோரிக்கை கள் அடங்கிய கடிதத்தையும் சித்தராமையா விடம் வழங்கினர். அதனைப் பெற்றுக் கொண்ட முதல்வர் சித்தராமையா எழுத்தாளர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: கர்நாடகத்தின் மதநல்லிணக்கம், மதச்சார்பின்மையை சமரசம் செய்யும் பேச்சுக்கே இடமில்லை. புதிய கல்வி கொள்கை என்ற பெயரில்  குழந்தைகளின் மனதில் விஷத்தை விதைக்கும் பாடத் திட் டங்களை அனுமதிக்க மாட்டோம். வெறுப்பு அரசியலைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம். இந்த விஷயமாக, மக்கள் மனங்களில் உருவாக்கப்பட்ட அச்சம் அப் புறப்படுத்தப்படும். இந்த மண்ணின் பன்முகத்தன்மையை சிதைக்க நினைக்கும் பாஜக-வை எதிர்த்து வலுவான குரல் கொடுக்கும் எழுத்தாளர்க ளுக்கு நான் நன்றியைத் தெரிவித்துக் கொள் கிறேன். இந்தக் கல்வி ஆண்டு தொடங்க வுள்ள நிலையில் கல்வியாளர்களுடன் ஆலோசித்து பாடத்திட்டத்தில் குழந்தைகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல், கன்னட போராளிகள், விவ சாயிகள், தொழிலாளர்கள், தலித் இயக்கங் கள் மற்றும் எழுத்தாளர்கள் மீது பாஜக  ஆட்சியில் தொடரப்பட்ட பொய் வழக்கு கள் திரும்பப் பெறப்படும். கல்வித் துறையை புதிய கல்விக் கொள்கை அணுகாதபடி பார்த்துக் கொள்ளப்படும். கலாச்சார காவ லர்கள் என்ற போர்வையில் எழுத்தாளர்க ளை அச்சுறுத்துவோரை கண்காணித்து நட வடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள் ளேன். இதுதொடர்பாக உரிய நடவடிக்கை  எடுக்கும்படி மாநில டிஜிபிக்கு உத்தரவிடப் பட்டுள்ளது. இதேபோல் மீண்டும் ஒரு ஆலோ சனைக் கூட்டம் விரைவில் நடத்தப்படும். இவ்வாறு சித்தராமையா பேசியுள்ளார்.