வாரிசுகளின் வெற்றி தோல்வி
காங்கிரஸ் அகில இந்தி யத் தலைவர் மல்லி கார்ஜூன கார்கேவின் மகன் பிரி யங்க் கார்கே சித்தாபூர் தொகுதி யில் போட்டியிட்டார். இங்கு அவர் சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். பாஜக முன்னாள் முதல்வர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் விஜ யேந்திரா ஷிகாரிபுரா தொகுதியில் போட்டியிட்டார். அவர், 81 ஆயிரத்து 810 வாக்குகள் பெற்று வெற்றி பெற் றுள்ளார். அதேநேரேம் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சியின் தலைவர் எச்.டி. குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, ராமநகரா தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அவர், காங்கிரஸ் வேட்பாளர் இக்பால் ஹூசைனிடம் 11 ஆயிரம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.
பெங்களூரு, மே 13- கர்நாடக சட்டப்பேரவைத் தேர்த லில் பாஜக தோற்று, காங்கிரஸ் ஆட்சி யைப் பிடித்துள்ள நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் குறித்து தலைவர் கள் பலரும் தங்களின் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மோசமான ஆட்சி நிர்வாகத்திற்கு மக்கள் பதிலடி: கார்கே
கர்நாடகத்தில் நடைபெற்ற மோச மான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர் என அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்த கார்கே, “பிர தமர், உள்துறை அமைச்சர், அமைச்சர் கள் என பாஜக தனது அனைத்து பலங்களையும் பயன்படுத்திய போதும் மக்கள் ஏமாறவில்லை” என் றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம்: சித்தராமையா
“கர்நாடக தேர்தல் முடிவு, பாஜக அரசு மீதான அதிருப்தியை வெளிப் படுத்துகிறது. தேர்தலில் ராகுல், பிரி யங்கா, மல்லிகார்ஜூன கார்கே தீவிர மாக பிரச்சாரம் செய்தனர். அவர்களின் இந்தப் பிரச்சாரம் வெற்றிக்கு காரண மாக அமைந்தது. 2018-இலும் தோல்வி யைத்தான் பாஜக சந்தித்தது. ஆனால் குறுக்கு வழியில் ஆட்சியமைத்தது. பணபலம் மூலம் கர்நாடகத்தில் வெற்றி பெற பாஜக நினைத்தது. கர்நாடக மக் கள் மாற்றத்தை எதிர்பார்த்து தேர்த லில் வாக்களித்துள்ளனர்” என்று காங்கிரஸ் தலைவர் சித்தராமையா கூறியுள்ளார். மேலும், “கர்நாடக தேர்தல் வெற்றியானது, மக்கள வைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக் கான முன்னோட்டமாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மோடிக்குக் கிடைத்த தோல்வி: ஜெய்ராம் ரமேஷ்
“கர்நாடகத் தேர்தலானது, பிரதமர் மோடி மீதான வாக்கெடுப்பு என்று கூறித்தான் பாஜக பிரச்சாரம் செய் தது. இந்நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி பெற்று, பிரதமர் மோடி தோல்வி அடைந்துள்ளார்” என்று காங்கிரசின் தகவல் தொடர்பு பிரிவு செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கிண்டல் செய்துள்ளார். மேலும், “காங் கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில், உணவுப் பாதுகாப்பு, விலைவாசி உயர்வு, விவ சாயிகள் பிரச்சனை, மின்சார விநி யோகம், வேலையின்மை, ஊழல் போன்ற மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனையை முன்வைத்தது. ஆனால், பிரதமர் மோடியோ மக்களி டையே பிரிவினைவாதத்தை புகுத்தி னார்” என்றும் ஜெய்ராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஊழல்வாதிகளின் தலையில் ஓங்கி அடித்த பஜ்ரங் பலி: பாகேல்
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல் அளித்திருக்கும் பேட்டியில், “கர்நாடகத் தேர்தல் தோல்வி, இது பிரதமர் மோடியின் தோல்வி. ‘பஜ்ரங் பலி’ (அனுமன்) யார் பக்கம் நின்றார் என்பது இப்போது தெரிந்திருக்கும். அவரது கதாயுதம் ஊழல்வாதிகளின் தலையில் ஓங்கி அடித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
ம.பி., ராஜஸ்தான், சத்தீஸ்கரிலும் பாஜக தோல்வி தொடரும்: கெலாட்
கர்நாடகம் வகுப்புவாத அரசி யலை விட, வளர்ச்சி அரசியலைத் தேர்ந்தெடுத்துள்ளது என்று ராஜஸ் தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். மேலும், “ராஜஸ் தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய மாநி லங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேர வைத் தேர்தல்களிலும் மீண்டும் இதே போன்று நிகழும்” என்றும் அவர் தெரி வித்துள்ளார்.
40% கமிஷன் அரசு என்று மக்களே கூறிவிட்டனர்: பைலட்
“கர்நாடக பாஜக அரசு 40 சதவிகித கமிஷன் அரசு’ என்ற முழக்கம் காங்கி ரஸ் கட்சியால் வைக்கப்பட்டது. எங்க ளது இந்த குற்றச்சாட்டை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்ப தையே கர்நாடகத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக” ராஜஸ்தான் முன்னாள் துணைமுதல்வர் சச்சின் பைலட் குறிப்பிட்டுள்ளார்.
தோல்வியை முழு மனதுடன் ஏற்கிறோம்: சரண்டரான பாஜக!
“எங்களால் குறிப்பிட்ட எண்ணிக்கை யைத் தொடமுடியவில்லை. ஆனால், காங்கி ரஸ் அதனை வெற்றிகரமாகச் செய்துவிட்டது. தோல்வியை முழு மனதுடன் ஏற்றுக்கொள்கி றோம். தேர்தல் முடிவுகள் வெளியானதும், தோல்வி நிலவரம் குறித்து முழுமையாக ஆராய்வோம். ஒரு தேசியக் கட்சியாக, நாங்கள் எந்த இடத்தில் பின்தங்கினோம், எங்கெல்லாம் இடைவெளி இருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும். இந்த தேர்தல் முடிவை நாங்கள் எங்கள் பயணத்தின் ஒருபடியாக எடுத்துக் கொள்வோம்” என்று கர்நாடக பாஜக முதல்வர் பசவராஜ் கூறியுள்ளார். “பாஜகவின் வெற்றிக்காக கடந்த 4 மாதங்க ளாக ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் உழைத் தேன், கர்நாடக மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன்; பாஜக-வுக்கு வெற்றி மற்றும் தோல்வி புதிதல்ல” என்று பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான பி.எஸ். எடியூரப்பா தெரிவித்துள்ளார்.