பெங்களூரு, ஜன.17- இந்தியத் தொழிலாளி வர்க்கத்தின் முன்னணி படையாம் இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு)வின் 17 ஆவது அகில இந்திய மாநாடு ஜனவரி 18 (இன்று) பெங்களூருவில் பேரெழுச்சி யுடன் துவங்குகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள பேலஸ் கிரவுன்ட்ஸ் எனும் மாபெரும் மைதானத்தில் நடைபெறும் சிஐடியு மாநாட் டின் வளாகத்திற்கு மறைந்த மூத்த தலைவர் ஷியாமள் சக்கரவர்த்தியின் பெயர் சூட் டப்பட்டுள்ளது. மறைந்த சிஐ டியு அகில இந்திய பொருளா ளர் ரஞ்சனா நிரூளா மற்றும் ரகுநாத் சிங் பெயர் சூட்டப் பட்டுள்ள அரங்கில் ஜனவரி 22 வரை இம்மாநாடு நடை பெறுகிறது.
மாநாட்டின் துவக்க நிகழ் வாக புதனன்று காலை 9 மணியளவில் கலை நிகழ்வு களோடு, செந்தொண்டர் களின் எழுச்சிமிகு அணி வகுப்பு நடைபெறுகிறது. 10 மணியளவில் மாநாடு கொடி யேற்றத்துடன் துவங்கு கிறது. அகில இந்திய தலை வர் டாக்டர் கே.ஹேமலதா மாநாட்டு கொடியை ஏற்று கிறார். வரவேற்புக் குழு தலைவர் கே.சுப்பாராவ் வர வேற்புரை நிகழ்த்துகிறார். மாநாட்டை துவக்கி வைத்து சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் உரையாற்று கிறார். உலக தொழிற்சங்க சம்மேளன பொதுச் செயலா ளர் பாம்பிஸ் கிரிட்சிஸ் வாழ்த்துரை நிகழ்த்துகிறார். பொது மாநாட்டை நிறைவு செய்து வரவேற்புக் குழு பொதுச் செயலாளர் எம்.எஸ்.மீனாட்சிசுந்தரம் நன்றி கூறுகிறார். இதைத் தொடர்ந்து பொதுச் செயலாளர் அறிக்கை, இந் திய தொழிலாளி வர்க்கத் தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்த அறிக்கைகள், நிதி நிலை அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்படுகின் றன. நாடு முழுவதும் இருந்து பல லட்சக்கணக்கான தொழி லாளர்களை பிரதிநிதித்து வப்படுத்தும் வகையில் 1500க்கும் மேற்பட்ட பிரதி நிதிகள் பங்கேற்கிறார்கள். பிரதிநிதிகள் விவாதம், புதிய நிர்வாகிகள் தேர் வினை தொடர்ந்து ஜனவரி 22 ஞாயிறன்று மாநாடு நிறைவு பெறுகிறது. அன் றைய தினம் மதியம் மாபெ ரும் பேரணியும், பெங்களூரு பசவனக்குடியில் உள்ள தேசிய கல்லூரி மைதானத் தில் மாபெரும் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.