பெங்களூரு,ஜன.24- இந்தி மொழியை வளர்ப்பதாகக் கூறி ரூ.5.78 கோடி மோசடி செய்ததாக இந்தி பிரச்சார சபாவின் முன்னாள் தலைவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இந்தி மொழியை பயிற்றுவிக்க தக்சிண பாரத் இந்தி பிரச்சார சபா (டி.பி.எச்.பி.எஸ்) செயல்பட்டு வருகிறது. 1964 ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம் இந்த அமைப்பை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனமாக ஒன்றிய அரசு அங்கீகரித்தது.இந்தி நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி வருகிறது. இந்நிலையில் இந்தி பிரச்சார சபாவின் கர்நாடக மாநில தார்வாட் முன்னாள் தலைவராக ஷிவ்யோகி ஆர்.நிரால்கட்டி என்பவர் செயல்பட்டு வந்தார். கடந்த 2004-05 முதல் 2016-17 ஆம் ஆண்டு வரை, மேற்கண்ட நிறுவனம் 600 ஆசிரியர்களை பணியமர்த்தியதன் மூலம் ரூ.5.78 கோடியை முறைகேடாக செலவழித்ததாகவும் இந்த தொகையை பி.எட் கல்லூரி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முறைகேடாக பயன்படுத்தியதும் ஒன்றிய அரசிடம் பொய்யான அறிக்கைகளை அளித்ததாகவும் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் தணிக்கையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து பெங்களூரு பிரிவு சிபிஐ விசாரணை நடத்தியது. இந்த விசாரணையின் மூலம் முறை கேடு நடந்துள்ளது உறுதி செய்யப்பட்டது.இதனால் இந்தி பிரச்சார சபாவின் முன்னாள் தலைவர் ஷிவ்யோகி ஆர்.நிரால்கட்டி, அவரது மகன் மற்றும் அடையாளம் தெரி யாத சில நபர்கள் மீது மோசடி மற்றும் கிரிமினல் குற்றச்சா ட்டின் கீழ் சிபிஐ, வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கியுள்ளது.