states

img

பெங்களூருவில் மரத்தில் கார் மோதிய விபத்து  

பெங்களூருவில் மரத்தில் கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த பாபா ஷாகேப் என்பவர், குடும்பத்தினருடன் கலபுரகியில் உள்ள தத்தாத்ரேயா கோவிலுக்கு சென்றுவிட்டு மராட்டியத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது பெங்களூரு கலபுரகி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மாலை வந்துகொண்டிருந்தபோது திடீரென கார் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் கார் ஓட்டுனர் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 வயது ஆண்குழந்தை உட்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.  இச்சம்பவம் அறிந்து விரைந்து வந்த அப்சல்புரா போலீசார், குழந்தை உட்பட 3 பேரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.  

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், மராட்டியத்தைச் சேர்ந்த பாபா ஷாகேப்(54), அவரது மனைவி சாயா, மகள்கள் கோமலி, ராணி மற்றும் ஈராபாய் என்று தெரிய வந்தது.

அதனைதொடர்ந்து இதுதொடர்பாக அப்சல்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.